நடப்பு ஆண்டில் ஒரே ஒரு முறை மட்டுமே நீட் தேர்வு: மத்திய அரசு உறுதி - ThulirKalvi

Latest

Search Here!

Monday, March 15, 2021

நடப்பு ஆண்டில் ஒரே ஒரு முறை மட்டுமே நீட் தேர்வு: மத்திய அரசு உறுதி

நடப்பு ஆண்டில் ஒரே ஒரு முறை மட்டுமே நீட் தேர்வு: மத்திய அரசு உறுதி 


நடப்பு ஆண்டில் ஒரே ஒரு முறை மட்டுமே நீட் தேர்வு நடத்தப்படும் என்று மத்திய அரசு உறுதிபடத் தெரிவித்துள்ளது. 

புது தில்லி: 


நடப்பு ஆண்டில் ஒரே ஒரு முறை மட்டுமே நீட் தேர்வு நடத்தப்படும் என்று மத்திய அரசு உறுதிபடத் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக திங்களன்று மக்களவையில் பாஜக எம்.பி லல்லு சிங் எழுப்பிய கேள்விக்கு மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில், 'மத்திய கல்வித்துறையின் கீழ் வரும் தேசியத் தேர்வு முகமையானது, நாடுமுழுவதும் மருத்துவ பட்டபடிப்புக்காவுக்கான நீட் நுழைவுத்தேர்வினை மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறையின் ஆலோசனையுடன் நடத்தி வருகிறது. 


அந்த வகையில் இந்த ஆண்டிற்கான நீட் தேர்வு ஒரே ஒரு முறை மட்டுமே நடத்தப்படும்' என்று தெரிவித்துள்ளார். ஹிந்தி, ஆங்கிலம் உள்ளிட்ட 11 மொழிகளில் நடத்தப்படும் நீட் தேர்வானது இவ்வாண்டு வரும் ஆகஸ்ட் மாதம் ஒன்றாம் தேதி நடத்தப்படும் என்று முன்னதாக அறிவிப்பு வெளியாகியிருந்தது குறிப்பிடத்தக்கது.