பொதுத்தேர்வுக்கு முன்பு 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு தடுப்பூசி போடுவது சாத்தியம் இல்லை நிபுணர்கள் கருத்து - துளிர்கல்வி

Latest

Tuesday, May 25, 2021

பொதுத்தேர்வுக்கு முன்பு 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு தடுப்பூசி போடுவது சாத்தியம் இல்லை நிபுணர்கள் கருத்து



கொரோனாவால் ஒத்திவைக்கப்பட்டுள்ள 12-ம் வகுப்பு பொதுத்தேர்வை நடத்துவது குறித்து மாநிலங்களுடன் நேற்று முன்தினம் மத்திய அரசு ஆலோசனை நடத்தியது. இதில், பொதுத்தேர்வுக்கு முன் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு தடுப்பூசி போட வேண்டும் என பல மாநிலங்கள் மத்திய அரசை அறிவுறுத்தின. இந்த நிலையில் மாநிலங்களின் இந்த பரிந்துரை குறித்து மருத்துவ நிபுணர்கள் பலர் நேற்று தங்கள் கருத்துகளை வெளியிட்டனர். அதில் பலரும், தேர்வுக்கு முன்பு மாணவர்களுக்கு தடுப்பூசி போடுவது முக்கியமானதுதான் என ஒப்புக்கொண்டனர். ஆனால் தற்போதைய நிலையில் இது நடைமுறை சாத்தியம் இல்லை என்பதையும் அவர்கள் விளக்கினர்.

No comments:

Post a Comment