சுப்ரீம் கோர்ட்டு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-
நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதையடுத்து, தேர்வு எழுதும் வக்கீல்கள், தேர்வு நடத்தும் அதிகாரிகள் நலன் கருதி வழக்கு தாக்கல் செய்யும் வக்கீல் தேர்வை தள்ளிவைக்க பல்வேறு தரப்பில் இருந்தும் கோரிக்கைகள் முன் வைக்கப்பட்டன. இதைத் தொடர்ந்து, ஜூன் 8 முதல் 11 வரை நடத்த திட்டமிட்ட வழக்கு தாக்கல் செய்யும் வக்கீல் தேர்வு தள்ளி வைக்கப்படுகிறது. புதிய தேர்வு தேதி பின்னர் அறிவிக்கப்படும்.
தேர்வு எழுத விண்ணப்பிக்கும் தேதி ஜூன் 30-ந் தேதி மாலை 5 மணி வரை நீட்டிக்கப்படுகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Search Here!
Thursday, May 13, 2021
New