‘நீட்’ தேர்வு பற்றி... கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நிருபர்களுக்கு அளித்த பேட்டி - துளிர்கல்வி

Latest

Tuesday, May 18, 2021

‘நீட்’ தேர்வு பற்றி... கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நிருபர்களுக்கு அளித்த பேட்டி



‘நீட்’ தேர்வு பற்றி... அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நிருபர்களுக்கு பேட்டி அளித்த போது, ‘நீட்’ தேர்வு தொடர்பாக நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர், ‘சட்டசபை கூடுவதற்காக காத்திருக்கிறோம். தி.மு.க. இளைஞரணி செயலாளரும், எம்.எல்.ஏ.வுமான உதயநிதி ஸ்டாலினிடம் சட்டமன்றத்தில் முதல் கேள்வியாக என்ன கேட்கப்போகிறீர்கள்? என்று நாங்கள் கேட்டபோது, ‘அதற்கு அவர் என்னுடைய முதல் கேள்வியே ‘நீட்’ தொடர்பாக தான் இருக்கும்' என்று கூறியுள்ளார். அதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டும் என்று தெரிவித்திருக்கிறார். சட்டசபை கூடும்போது அதற்கான அறிவிப்பு இருக்கும்' என்றார்.

No comments:

Post a Comment