பழங்குடியினர் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வு ஜூன் 30-இல் கலந்தாய்வு - ThulirKalvi

Latest

Search Here!

Sunday, June 27, 2021

பழங்குடியினர் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வு ஜூன் 30-இல் கலந்தாய்வு

பழங்குடியினர் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வு ஜூன் 30-இல் கலந்தாய்வு 


சென்னை, ஜூன் 26: பழங்குடியினர் உண்டி உறைவிட மேல்நி லைப்பள்ளித் தலைமை ஆசிரியர் பதவி உயர்வுக்கான கலந்தாய்வு ஜூன் 30-ஆம் தேதி சென்னையில் நடைபெறவுள்ளது. இது குறித்து பழங்குடியினர் நல இயக்குநர் வி.சி.ராகுல் பழங்கு டியினர் நல திட்ட அலுவலர்கள், தொடர்புடைய பள்ளித் தலை மையாசிரியர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை: அரசு பழங்கு டியினர் உண்டி உறைவிட மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரி யர் பதவி உயர்வு வழங்கிட 1.1.2021 அன்றைய நிலையில் தெரிவுப் பட்டியல் வெளியிட்டு ஆணையிடப்பட்டுள்ளதைத் தொடர்ந்து அதில் இடம்பெற்றுள்ள ஆசிரியர்களுக்கு ஜூன் 30-ஆம் தேதி காலை 10 மணிக்கு சென்னையில் உள்ள பழங்குடியினர் நல இயக் குநரகத்தில் பதவி உயர்வுக்கான கலந்தாய்வு நடைபெறவுள்ளது. 


இந்தக் கலந்தாய்வு நாளன்று கரோனா முன்னெச்சரிக்கை நட வடிக்கைகளை தவறாமல் பின்பற்ற வேண்டும். இந்த ஆணை யினை சம்பந்தப்பட்ட ஆசிரியர்களுக்கு தெரியும் வகையில் தக வல் பலகையில் வைத்தும், அனைவருக்கும் சுற்றுக்கு அனுப்பி கையெழுத்து பெறுமாறும் தொடர்புடைய கட்டுப்பாட்டு அலுவலர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என அதில் தெரிவித்துள்ளார்.