தொழில் தொடங்க வழிகாட்டும் இணையதளத்தை மேம்படுத்த குழு அமைப்பு அரசாணை வெளியீடு - ThulirKalvi

Latest

Search Here!

Sunday, June 13, 2021

தொழில் தொடங்க வழிகாட்டும் இணையதளத்தை மேம்படுத்த குழு அமைப்பு அரசாணை வெளியீடு

தமிழக தலைமை செயலாளர் இறையன்பு வெளியிட்ட அரசாணையில் கூறப்பட்டு இருப்பதாவது:- தமிழகத்தில் தொழிலை எளிதாக தொடங்குவதற்கான சூழ்நிலையை முன்னேற்றுவதன் அம்சமாக ஒற்றை சாளர இணையதளத்தை ( www.tnswp.com ) அரசு செயல்படுத்தி வருகிறது. 

தொழிலை எளிதாக செய்வதற்கான வசதியை இந்த இணையதளம் வழங்குகிறது. இந்த இணையதளத்தை தொழில்துறையின் தொடர்பு முகமையான தொழில் வழிகாட்டி நிறுவனம் வெற்றிகரமாக செயல்படுத்தி வருகிறது. இந்த இணையதளத்தில் அனைத்து அரசு துறைகளும் இணைக்கப்பட்டு இருக்கும். அரசு துறைகளில் மேற்கொள்ளப்படும் திருத்தங்கள் உடனுக்குடன் சம்பந்தப்பட்ட தொழில் நிறுவனங்களின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும். 

 இந்த இணையதளத்தை மேலும் சிறப்பாக இயக்குவதற்கான அம்சங்களை செயல்படுத்துவதற்கான ஆணையை அரசு பிறப்பித்துள்ளது. மேலும் அதன் செயல்பாட்டை கண்காணிப்பதற்கான குழுவை அமைத்து அரசு உத்தரவிடுகிறது. அதன்படி, அந்த குழுவின் தலைவராக தொழில் வழிகாட்டி நிறுவன மேலாண்மை இயக்குனர் மற்றும் தலைமை செயல் அதிகாரி தலைவராக இருப்பார். அதன் செயல் இயக்குனர், குழுவின் உறுப்பினர் செயலாளராகவும், ஒற்றை சாளர இணையதளத்தின் திட்ட மேலாளரும், அரசு துறைகளின் தொடர்பு அதிகாரியும், இந்த குழுவின் உறுப்பினர்களாக இருப்பார்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.