அரசு பள்ளிகளில் நாளை முதல் மாணவர் சேர்க்கை நடைபெறும் | பள்ளிகல்வித்துறை அறிவிப்பு - ThulirKalvi

Latest

Search Here!

Sunday, June 13, 2021

அரசு பள்ளிகளில் நாளை முதல் மாணவர் சேர்க்கை நடைபெறும் | பள்ளிகல்வித்துறை அறிவிப்பு

அரசு பள்ளிகளில் நாளை முதல் மாணவர் சேர்க்கை நடைபெறும் | பள்ளிகல்வித்துறை அறிவிப்பு 


அரசு பள்ளிகளில் நாளை முதல் மாணவர் சேர்க்கை நடைபெறும் என்று பள்ளிகல்வித்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற் காக கடந்த மாதம் 10ந் தேதி முதல் ஊரடங்கு பிறப்பிக்கப் பட்டது. தொடக்கத்தில் எதிர்பார்த்த அளவுக்கு பலன் கிடைக்காததால், ஊரடங்கு 24ந் தேதி முதல் 31ந் தேதி வரையிலும், பின்னர் 31ந் தேதியில் இருந்து 7ந் தேதி வரையிலும் நீட்டிக்கப்பட்டது. கடைசியாக அறிவித்த தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கின் காரணமாக கொரோனா தொற்று பாதிப்பு கணிசமாக குறைந்தது. பொதுமக்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு 14ந் தேதி காலை 6 மணி வரையிலும் நீட்டிக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து தமிழகத்தில் ஊரடங்கினை 5வது முறையாக மேலும் ஒரு வாரத்துக்கு, அதாவது ஜூன் 21ந் தேதி காலை 6 மணி வரை தளர்வுகளுடன் நீட்டித்து முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டிருந்தார். இதனிடையே அரசு மற்றும் அரசு நிதி உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கான இலவச பாடப்புத்தகங்கள் ஒன்றாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை அச்சடித்து முடிக்கப்பட்டுள்ளன என்றும், 6 கோடி இல வச பாடப் புத்தகங்கள் அனைத்து அரசுப் பள்ளிகளுக்கும், அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளுக்கும் முழுமையாக அனுப்பப்பட்டு விட்டன என்றும், பள்ளிகள் எப்போது திறக்கப்பட்டாலும் புத்தகங்கள் உடனடியாக மாணவர் களுக்கு வழங்கும் வகையில் தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளதாகவும் பள்ளி கல்வித்துறை தெரிவித்திருந்தது. இந்நிலையில் அரசு பள்ளிகளில் நாளை முதல் மாணவர் சேர்க்கை நடைபெறும் என்று பள்ளி கல்வித்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மேலும் நாளை முதல் அரசு பள்ளி மாணவர்களுக்கு பாடப்புத்தகங்கள் வழங்கப்படும் என்று பள்ளிக்கல்வித் துறை அறிவித்துள்ளது