கல்லூரி மாணவர்களின் விடைத்தாள்கள் தபாலில் அனுப்ப சிறப்பு கவுண்டர்! - ThulirKalvi

Latest

Search Here!

Sunday, June 27, 2021

கல்லூரி மாணவர்களின் விடைத்தாள்கள் தபாலில் அனுப்ப சிறப்பு கவுண்டர்!

கல்லூரி மாணவர்களின் விடைத்தாள்கள் தபாலில் அனுப்ப சிறப்பு கவுண்டர்! 


தமிழகத்திலுள்ள இன்ஜினியரிங் பாலிடெக்னிக் மற்றும் கலை அறிவியல் கல்லூரி உள்ளிட்ட அனைத்து கல்லூரி மாணவர்களுக்கும் ஆண்டு இறுதித் தேர்வு இணையதளம் மூபமாக தற்போது நடந்து வருகிறது. மாணவர்கள் தங்களது தேர்வு விடைத்தாள்களை தபால் முமாக அனைத்து அஞ்சல் அலுவலகங்களிலும்அணுப்பலாம்.


 மாணவர்கள்விடைத்தாள்களைசிரமமின்றி அனுப்புவதற்கு எதுவாக சேலம் ஆத்தூர் தலைமை அஞ்சல் அலுவலகம் -அஸ்தம்பட்டி, அழகாபுரம், பேர்லான்ட்ஸ், வாழப்பாடி, தலைவாசல், துணை தபால் நிலையங்களில் சிறப்பு கவுன்டர்கள் வசதிகள் எற்படுத்தப்பட்டு உள்ளது. இந்த சேவை, பருவ தேர்வு முடியும் வரை செயல்படும் எனவே கல்லூரி மாணவர்கள் இந்திய அஞ்சல் சேவையை பயன்படுத்திக் கொள்ளுமாறு சேலம் கிழக்கு கோட்ட முதுநிலை கண்காணிப்பாளர் அருணாசலம் தெரிவித்துள்ளார்