ஆகஸ்ட் 3 - தீரன் சின்னமலை நினைவு நாள் உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சித்தலைவர் உத்தரவு. - ThulirKalvi

Latest

Search Here!

Saturday, July 31, 2021

ஆகஸ்ட் 3 - தீரன் சின்னமலை நினைவு நாள் உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சித்தலைவர் உத்தரவு.

ஆகஸ்ட் 3 - தீரன் சின்னமலை நினைவு நாள் உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சித்தலைவர் உத்தரவு. 

ஈரோடு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களின் செயல்முறைகள் 

பிறப்பிப்பவர் : திரு. ஹெச். கிருஷ்ணானுண்ணி, இ.ஆ.ப., கா.மு.அ.597/2021/08 நாள்.31.07.2021 

உள்ளுர் விடுமுறை - 


ஆணை: 

ஈரோடு மாவட்டம், சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலை அவர்களின் நினைவு தினம் ஆடித்திங்கள் 18-ம் நாளான 03.08.2021 செவ்வாய்க்கிழமை அனுசரிக்கப்படுவதால், பார்வை 01-இல் காணும் அரசாணையின்படி ஈரோடு மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் உள்ளூர் விடுமுறை அளித்து ஆணையிடப்படுகிறது. 

02), உள்ளூர் விடுமுறை நாளான 03.08.2021 செவ்வாய்க்கிழமை அன்று அவசர அலுவல்களை கவனிக்கும் பொருட்டு ஈரோடு மாவட்டத்திலுள்ள கருவூலம் மற்றும் சார்நிலை கருவூலங்களில் குறிப்பிட்ட பணியாளர்களோடு செயல்பட வேண்டியது எனவும் ஆணையிடப்படுகிறது. 

03). இந்த விடுமுறை செலாவணி முறிச்சட்டம் 1881 (under. Negotiable Instruments Act 1881)-ன் கீழ் அறிவிக்கப்படவில்லை என்பதால், வங்கிகளுக்கு இவ்விடுமுறை பொருந்தாது. 

04). இவ்விடுமுறையை ஈடு செய்யும் பொருட்டு, ஈரோடு மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு 14.08.2021 சனிக்கிழமை அன்று பணி நாளாக அறிவிக்கப்படுகிறது.