ஆடி 18 தாய்மாமன் தினம் !!! - துளிர்கல்வி

Latest

Search This Site

Monday, August 2, 2021

ஆடி 18 தாய்மாமன் தினம் !!!

உறவுகளில் அனைவருக்கும் பிடித்தமான உறவு என்றால் உடனே சொல்வார்கள் தாய்மாமன் உறவு என்று தான் . பள்ளிகளில் விடுமுறை விட்டால் எந்த ஊருக்கு செல்வாய் என்ற படிக்கும் பசங்களிடம் ஒரு காலத்தில் ( தற்போது அல்ல ) எங்க மாமா வீட்டுக்க போனேன் என்று தான் சொல்வார்கள் . புதிதாக விளையாட்டுப்பொருள் வைத்திருந்தாள் யாருடா வாங்கிக்கொடுத்தா என்று நண்பனிடம் கேட்டால் எங்க மாமா என்பான் அந்த அளவிற்கு அனைவருக்கும் பிடித்தமான உறவு என்றால் அது தாய்மாமா தான். 



எவன் ஒருவன் அக்கா தங்கையுடன் பிறக்கின்றானோ அவனே வாழ்வாங்கு வாழ்வான் ” என்பது சொல்வடை. உறவுகளில் ஆகச் சிறந்தது தாய்மாமன் உறவு. அம்மா , அப்பா , அண்ணன், தங்கை, தம்பி இவற்றை விட சிறந்தது தாய்மாமன் உறவு. தந்தையின் உறவு என்பது வேறு வகையானது . ஆனால் தாய் மாமன் உறவு என்பது எந்த வித முன் தொடுப்பும் இல்லாது வருவது . தங்கைக்கு தகப்பனாய் , அவள் பெறும் குழந்தைகளுக்குப் உற்ற பாதுகாவலனாய் , நண்பனாக அந்த குழந்தை கேட்டதை எல்லாம் வாங்கிக்கொடுத்து அதன் முகத்தில் அதிக மகிழ்ச்சியை பார்ப்பது தாய்மாமன் தான். 



இன்றும் மாமா வருகிறார் என்றால் குழந்தையின் சந்தோசத்தை சொல்லிமாளது. . உங்க எல்லாருக்கும் தெரியாதது இல்லை உலகத்துலயே இந்த ஒத்த கூட்டத்துக்குதான்யா தாய் மாமன் என்ற உரிமையும் பெருமையும் இருக்கு. ஒரு காலத்துல இந்த மண்ண காக்க சண்டைக்கு போன நம்ம பயக பொண்டாட்டி பிள்ளைய அவன் அண்ணன் தம்பிய நம்பி விட்டு போகல ஏன் பெத்த அப்பன நம்பி விட்டு போகல அவ பொறந்த வீட்டுல அவ அண்ணன நம்பி விட்டுட்டு போணான். ஏன் ? 



சண்டைக்கு போனவன் வராம போயிட்ட அவளுக்கு அண்ணனாவும் அவ பெத்த பிள்ளைக்கு தாய் மாமனாவும் இருந்து கடைசி வரைக்கும் கட்டி காப்பாத்துவானு நம்பிக்கையில தான் போனான். அதே தங்கச்சிக்கு ஒரு பிள்ளை பிறந்தா முதச்சேனையா சீனிப்பால் தொட்டு வச்சு பசிய போக்குறவன்தான்யா இந்த தாய்மாமமன். தாய்மாமன் சேனை தொட்டுவச்சப்பறம் தான் பெத்த தாயே பால் கொடுக்கிறா. 



அந்த பிள்ளைக்கு காதுகுத்துனா தன்மடில உட்கார வச்சு காதுகுத்தி சீர் செஞ்சு இருக்க இடம் குடுக்குறவன்தான்யா இந்த தாய்மாமன் அதே புள்ளை வளந்து ஆளாகி நிக்கிறப்ப ஒதுங்கிறதுக்கு ஓலை குடிசை கட்டிக்குடுத்து தாய்மாமன் நான் இருக்கேனு தைரியமா இருனு சொல்றானே அவன்தான்யா இந்த தாய் மாமன். அதே தங்கச்சிக்கு கூன் குருடு நொண்டினு ஒரு பிள்ளை பிறந்துட்டா இந்த ஊருல இருக்க ஒரு பயன் கட்டிக்க மாட்டான். அத தன் மகனுக்கு உரிமையெடுத்து கட்டி வச்சு காத்து தன் உசுரயே குடுக்குறவன்தான்யா தாய் மாமன். 



தன் தங்கையின் குழந்தைகளை தன் குழந்தைகளைப் போல கவனிப்பான் . அக்குழந்தைகளின் ஒவ்வொரு நல்லதுக்கும் தாய்மாமனே முக்கியம் என்று தமிழர் பண்பாடு சொல்கிறது. காது குத்துவதிலிருந்து , திருமணத்திற்கு மாலை எடுத்துக் கொடுப்பது வரையிலும் இன்னும் அனைத்து நல்லதற்கும் , கெட்டதற்கும் தாய்மாமனே முன்னிற்பான் . தங்கையின் அல்லது அக்காவின் கணவருக்கு அதிக உதவிகள் செய்வது எங்கள் மாமா என்று உரிமையோடு அவருக்கு துணையாக செல்வது என்று சொல்லிக்கொண்டே போகலாம் . 



தன் குடும்பத்தைக் கவனிப்பதை விட தங்கையின் தேவைகளை அறிந்து அதை நிறைவேற்றுபவன், அண்ணன் தனக்காக தன்னை வருத்திக் கொள்கிறானே என்று அண்ணன் நன்றாக வாழ வேண்டும் என்று ஒரு நொடி அத்தங்கை நினைத்தால் என்றால் அண்ணன் மாடி மீது மாடி கட்டி வாழ்வான். எவனொருவன் கூடப் பிறந்தவர்களை அழ விடுகின்றானோ அவன் எந்தக் காலத்தும் சிறந்து வாழ முடியவே முடியாது. 



சில ஊர்ப்பக்கம் தங்கையின் மகளோ அல்லது அக்காவின் மகளோ இயற்கை குறையோடு இருந்தால் தாய்மாமனுக்குத் தான் கட்டி வைப்பார்கள். தாய்மாமனுக்கு வயதாகி விட்டால் அவனின் மகனுக்கு திருமணம் செய்து வைப்பார்கள். தாய் மாமன் உறவென்பது தியாகத்தின் உருவம். இந்த தியாகத்தை தந்தையோ , தனயனோ செய்ய முடியுமா ? அப்பெண்ணுக்கு வாழ்க்கை கொடுத்து வாழ வைப்பவன் கடவுளுக்கும் நிகரனாவன் அல்லவா?



உறவுகளில் மிகச் சிறந்த உறவு “ தாய்மாமன்” என்று அடித்துச் சொல்லலாம் . ஆனால் இன்று குழந்தைகளின் பெற்றோர் தனது வேலை காரணமாக வெளியூர்களில் இருப்பதால் குழந்தைகளும் அவர்களுடனே இருக்கும் அதனால் இப்போதெல்லாம் தாய்மாமன் உறவு முறை சிறிது சிறிதாக குறைந்து வருகிறது . குழந்தையும் தாய்மாமனை மாதம் ஒரு முறை என்று பார்த்து மாமாவின் முகம் மறைகிறது என்பதுதான் இன்றைய நிதர்சன உண்மை ...

No comments:

Post a Comment