டிஎன்பிஎஸ்சி தேர்வுக்கு விண்ணப்பிக்க - ஆதார் எண் கேட்பதற்கு தடை விதிக்கக் கோரி வழக்கு - ThulirKalvi

Latest

Search Here!

Saturday, September 18, 2021

டிஎன்பிஎஸ்சி தேர்வுக்கு விண்ணப்பிக்க - ஆதார் எண் கேட்பதற்கு தடை விதிக்கக் கோரி வழக்கு

டிஎன்பிஎஸ்சி தேர்வுக்கு விண் ணப்பிக்க ஆதார் எண் கட்டாயம் என்ற அறிவிப்புக்கு தடை விதிக்கக் கோரிய மனுவுக்கு டிஎன்பிஎஸ்சியிடம் தகவல் கேட்டு தெரிவிக்க நீதிபதிகள் உத்தர விட்டனர். 

 மதுரையைச் சேர்ந்த ஜானகி, உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு: டிஎன்பிஎஸ்சி (தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்) சார்பில் அரசு குற்றவியல் வழக்கறிஞர் பணித் தேர்வு தொடர்பாக ஆக. 25-ல் அறிவிப்பாணை வெளியிடப்பட்டது. தற்போது டிஎன்பிஎஸ்சி தேர்வுக்கு ஆன்லைன் மூலம் ஒருமுறை பதிவு செய்து கொண்டோருக்கு வழங்கப்பட்ட அடையாள எண்ணைக் கொண்டு அனைத்து தேர்வுக்கும் விண்ணப்பிக்கலாம். 

அரசு குற்றவியல் வழக் கறிஞர் நியமனத் தேர்வுக்கு டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் விண்ணப்பிக்க முயன்றால், விண்ணப்பதாரரின் ஆதார் எண் கேட்கிறது. ஆதார் எண் கொடுக்காவிட்டால் டிஎன்பிஎஸ்சி தேர்வுக்கு விண்ணப்பிக்க முடியாத நிலை உள்ளது. போட்டித் தேர்வுகளுக்கு விண்ணப்பிக்கவும், தேர்வு எழுத வும் ஆதார் எண் கட்டாயம் இல்லை என உச்ச நீதிமன்றம் ஏற்கெனவே உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவை மீறி டிஎன்பி எஸ்சி தேர்வுக்கு ஆதார் எண் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. எனவே டிஎன்பிஎஸ்சி தேர் வுக்கு விண்ணப்பிக்க ஆதார் எண் கட்டாயம் என்ற அறிவிப் பாணையை செயல்படுத்த இடைக் காலத் தடை விதித்து உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது. 

 இந்த மனு நீதிபதிகள் எம்.துரைசாமி, கே.முரளிசங்கர் முன்பு விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில், டிஎன்பிஎஸ்சி ஒருமுறை பதிவில் ஆதார் எண் பதிவு செய்து 10 நாட்களுக்கு மேல் ஆகியும் தற்போது வரை பதிவேற்றம் ஆகவில்லை. ஒரு வாரத்தில் அரசு குற்றவியல் வழக்கறிஞர் நியமன தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி முடிகிறது என்றார். இதையடுத்து, மனு தொடர்பாக டிஎன்பிஎஸ்சியிடம் உரிய விளக் கம் பெற்று நீதிமன்றத்துக்கு தெரிவிக்க அரசு வழக்கறிஞருக்கு உத்தரவிட்டு விசாரணையை செப். 23-ம் தேதிக்கு நீதிபதிகள் தள்ளி வைத்தனர்.