'இன்னுயிர் காப்போம்' அரசாணை வெளியீடு - ThulirKalvi

Latest

Search Here!

Thursday, December 23, 2021

'இன்னுயிர் காப்போம்' அரசாணை வெளியீடு

'இன்னுயிர் காப்போம்' அரசாணை வெளியீடு 

விபத்தில் பாதிக்கப்பட்டோருக்கு சிகிச்சை அளிக்க, 'இன்னுயிர் காப்போம் - நம்மை காக்கும் 48' திட்டத்தை செயல்படுத்த, அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அதன் விபரம்:* அனைவருக்கும் தமிழக எல்லைக்குள் ஏற்படும் சாலை விபத்துகளுக்கு மட்டும், இந்த திட்டத்தில், இலவச மருத்துவ சிகிச்சை அளிக்கப்படும் 

* தமிழக எல்லைக்குள் சாலை விபத்தால் பாதிக்கப்பட்டோரை, அருகில் உள்ள பக்கத்து மாநில அங்கீகரிக்கப்பட்ட மருத்துவமனையில், அரசு நிர்ணயித்த கட்டணத்தில் இலவச சிகிச்சை வழங்கப்படும் 

* இத்திட்டத்திற்கு முதல் கட்டமாக, 50 கோடி ரூபாய் ஒதுக்கப்படும். ஒருவருக்கு 1 லட்சம் ரூபாய் செலவில், 81 தேர்ந்தெடுக்கப்பட்ட மருத்துவ சிகிச்சை முறைகள் மேற்கொள்ளப்படும் 

* சேத குறைப்பு அடிப்படையில், உயிர் காக்கும் அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளப்படும் 

* சாலை விபத்தில் பாதிக்கப்பட்டவர், உள்நோயாளியாக அனுமதிக்கப்படும் மருத்துவ மனையில், முதல் 48 மணி நேரம் வரை, அங்கீ கரிக்கப்பட்ட முறைகளில் இலவச சிகிச்சை பெறலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளன.கடந்த 18ம் தேதி துவங்கப்பட்ட திட்டத்தில், இதுவரை, 456 பேர் பயனடைந்துள்ளனர்.