வாக்காளர் விழிப்புணர்வு போட்டி விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு - ThulirKalvi

Latest

Search Here!

Tuesday, March 22, 2022

வாக்காளர் விழிப்புணர்வு போட்டி விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு

தேசிய வாக்காளர் விழிப்புணர்வு போட்டிகளில் விண்ணப்பிக்க, இம்மாதம் 31ம் தேதி வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து சென்னை மாநகராட்சி வெளியிட்டு உள்ள செய்தி குறிப்பு:இந்திய தேர்தல் ஆணையத்தின் சார்பில், 'எனது ஓட்டு, எனது எதிர்காலம் - ஒரு வாக்கின் வலிமை' என்ற கருப்பொருளை மையப்படுத்தி, தேசிய வாக்காளர் விழிப்புணர்வு போட்டிகள் நடத்தப்படுகின்றன. 
 இதில், குறும்படம் உருவாக்கம், பாட்டு போட்டி, சுவரொட்டி உருவாக்கம், வாசகங்கள் உருவாக்கம், வினாடி - வினா உள்ளிட்ட போட்டிகளில் பங்கேற்கலாம்.இப்போட்டிகளில், பள்ளி, கல்லுாரி மாணவர்கள், அரசு அலுவலர்கள், பொதுமக்கள் என அனைவரும் பங்கேற்கலாம். இப்போட்டிகளில் பங்கேற்க விரும்புவோர், https://voterawarenesscontest.in/ என்ற இணையதளத்தில், மார்ச் 15ம் தேதிக்குள் பதிவு செய்ய வேண்டும் என கூறப்பட்டிருந்தது. தற்போது மார்ச் 31 வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இப்போட்டிகள் தொடர்பான மேலும் தகவல்களுக்கு https://ecisveep.nic.in/contest/ என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.