நீர் தோசை செய்வது எப்படி? - ThulirKalvi

Latest

Search Here!

Tuesday, March 22, 2022

நீர் தோசை செய்வது எப்படி?

நீர் தோசை செய்வது எப்படி?


நீர் தோசை மங்களூரில் மிக பிரபலமான காலை சிற்றுண்டி. அரைத்த உடனே சுட்டுவிடலாம். காலையில் சுடுவதாக இருந்தால் அரிசியை இரவே ஊறவைக்கவும்.
இதற்கு காரசட்னி/தேங்காய் சட்னி/ சிக்கன் குழம்பு ஏற்றது.
தேவையான பொருட்கள்:
பச்சரிசி – 1 கப்
துருவிய தேங்காய் – 1/2 கப்
உப்பு – தேவைக்கு

செய்முறை:

அரிசியை 2 மணி நேரம் ஊறவைத்து தேங்காய் சேர்த்து மிக நைசாக உப்பு சேர்த்து அரைக்கவும்.
இதற்கு மாவு நீர்க்க இருக்க வேண்டும். அரைத்த மாவில் மேலும் 1 கப் நீர் ஊற்றி கரைக்கவும்.
இரும்பு தோசை கல்லை காயவைத்து எண்ணெய் ஊற்றி நன்கு தேய்த்த பின் மாவினை கல்லின் ஓரத்திலிருந்து ஊற்றி நடுவில் முடிக்கவும். ரவா தோசைக்கு சுடுவது போல் மாவினை ஊற்றவும்.
மூடி போட்டு வேகவைக்கவும். ஓரங்கள் வெந்து வரும் போது மடித்து எடுக்கவும்.
காரமான சட்னியுடன் பரிமாறவும்!
🎈🧸🎈