முகம் பிரகாசிக்க குங்குமப்பூ - ThulirKalvi

Latest

Search Here!

Monday, May 9, 2022

முகம் பிரகாசிக்க குங்குமப்பூ

குங்குமப்பூவை பொடியாக்கி அதில் சிறிது அளவு எடுத்துக் கொண்டு சில சொட்டுக்கள் பால் விட்டு கலந்து குழைத்துக் கொள்ளவும். இந்தக் கலவையை முகத்தில் பூசி வர முகத்தில் படர்ந்துள்ள கருமை நிறம் குறைவதை கண் கூடக் காணலாம். 


குங்குமப்பூவை உரசி சிறிது தண்ணீர் விட்டு சிறிது நேரம் ஊற விடவும். குங்கும பூவின் நிறம் முழுக்க நீரில் ஊறியதும் சிறிது வெண்ணை கலந்து நன்றாக குழைக்கவும். இந்த கலவையை தினமும் பூசி வர உதடுகள் செவ்வாழை நிறம் பெறும். உதடுகளின் வறட்சி இருந்த இடம் தெரியாமல் ஓடி விடும். முகத்தில் உள்ள கரும்புள்ளிகளும் மறைந்து விடும். 

நக சுத்தி வந்து அழுகிப் போன நகங்கள், உடைந்து போன நகங்கள் போன்றவற்றை குங்குமப்பூ வெண்ணை கலவையானது சீர்படுத்தி இழந்த அழகை மீட்டுத்தரும். முகத்திற்கு வசீகரத்தை தருவது கவர்ச்சி மிகு கண்கள்தான். அந்த கண்களுக்கு அழகைத் தருவது அடர்த்தியான இமைகள். பட்டாம்பூச்சி போல படபடக்கும் இமைகள் அமைய குங்குமப்பூ உதவுகிறது.

சில பெண்கள் நல்ல நிறமாக இருப்பார்கள். ஆனால் உதடுகள் மட்டும் கருமை படர்ந்து அசிங்கமாக இருக்கும். இப்படிப்பட்ட பெண்கள் குங்குமப்பூவை பயன்படுத்தினால் அழகு சிலையாக மாறுவது நிச்சயம்.

குங்குமப்பூ கண் பார்வைக்கு மிகவும் நல்லது. கர்ப்ப காலத்தில் எடுத்து கொள்ளப்படும் குங்குமப்பூ, கண் புரை போன்ற பிரச்சனைகள் ஏற்படாமல் தடுக்கும் என்று ஆய்வுகளில் நிருபிக்கப்பட்டுள்ளது.

பகிர்வு
⫷⫸⫷⫸🅜🅐🅛🅛🅘🅚🅐⫷⫸⫷⫸