கலை, அறிவியல் கல்லூரிகளுக்கு விண்ணப்பிக்கும் தேதிகள் அறிவிப்பு - ThulirKalvi

Latest

Search Here!

Friday, April 28, 2023

கலை, அறிவியல் கல்லூரிகளுக்கு விண்ணப்பிக்கும் தேதிகள் அறிவிப்பு

கலை, அறிவியல் கல்லூரிகளுக்கு விண்ணப்பிக்கும் தேதிகள் அறிவிப்பு 

தமிழகத்தில் உள்ள தனியார் கலை, அறிவியல் கல் லூரிகளில் 2023-2024-ஆம் கல்வியாண்டுக்கான இளநிலைப் படிப் புகளின் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்ப விநியோகம் வரும் மே 1-ஆம் தேதி தொடங்கவுள்ளது. தமிழகத்தில் பிளஸ் 2 வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு மார்ச் 13-இல் தொடங்கி ஏப். 3- ஆம் தேதி முடிவடைந் தது. தேர்வு முடிவுகள் வரும் மே 8- ஆம் தேதி வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 
இந்த நிலையில், கலை- -அறிவியல் கல்லூரிகளில் 2023-2024-ஆம் கல்வியாண்டில் இளநிலைப் படிப்புகளுக்கான மாணவர் சேர்க் கைக்கு விண்ணப்பப் பதிவு குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன. தமிழகத்தில் மொத்தம் 633 தனியார் கலை-அறிவியல் கல்லூரி கள், 163 அரசு கலை- அறிவியல் கல்லூரிகள் உள்ளன. இவற்றில் தனியார் கல்லூரிகளில் மே 1-ஆம் தேதி விண்ணப்ப விநியோகம் தொடங்கவுள்ளது. மே 8- ஆம் தேதி பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியான பிறகு மாணவர்கள் மதிப்பெண் சான்றிதழ்களை இணையவழியில் பதி வேற்றம் செய்து கொள்ளலாம். 

அதேபோல, சேர்க்கைக்கான விண் ணப்பங்களை அந்தந்த தனியார் கல்லூரிகளின் இணையதள முகவ ரிகளில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். அரசுக் கல்லூரிகளில்... அரசு, அரசு உதவி பெறும் கல்லூரிக ளைப் பொருத்தவரை பிளஸ் 2 பொதுத் தேர்வு முடிவுகள் வெளி யான பின்னர், மே 9-ஆம் தேதி முதல் விண்ணப்ப விநியோகம் தொடங்கும் என உயர்கல்வித் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.