மகளிர் உரிமைத்தொகை பெற வங்கிக்கணக்கு தொடங்க தபால் நிலையங்களில் சிறப்பு ஏற்பாடு கோட்ட கண்காணிப்பாளர் தகவல் - துளிர்கல்வி

Latest

Monday, September 4, 2023

மகளிர் உரிமைத்தொகை பெற வங்கிக்கணக்கு தொடங்க தபால் நிலையங்களில் சிறப்பு ஏற்பாடு கோட்ட கண்காணிப்பாளர் தகவல்

அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் விஜயதனசேகர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:- 

கலைஞர் மகளிர் உரிமைத்தொகை பெற தகுதியுள்ள பயனாளிகளுக்கு ஆதார் இணைப்புடன் கூடிய வங்கி கணக்கு அவசியம் என்பதால், தகுதியுள்ள பயனாளிகள் அருகில் உள்ள அஞ்சலகங்கள், தபால்காரர், கிராம அஞ்சல் ஊழியரை அணுகி ஆதார் இணைப்புடன் கூடிய இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி கணக்கு தொடங்கலாம். தபால்காரர் மற்றும் கிராம அஞ்சல் ஊழியர்களுக்கு வழங்கப்பட்டுள்ள ஸ்மார்ட் போன், பயோமெட்ரிக் சாதனத்தின் மூலம் பயனாளிகள் தங்களின் ஆதார் மற்றும் மொபைல் எண்ணை பயன்படுத்தி e-EYC மூலம்(விரல் ரேகை) சில நிமிடங்களில் ஆதார் இணைப்புடன் கூடிய இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி கணக்கு தொடங்கலாம். 

இந்த கணக்கிற்கு இருப்பு தொகை எதுவும் கிடையாது. பயனாளிகள், மாதாந்திர உாிமை தொகையை அருகில் உள்ள அஞ்சலகங்களிலும், door step banking என்ற சிறப்பு சேவை மூலம் தங்கள் இல்லத்திலேயே தபால்காரரிடம் பெற்றுக் கொள்ள முடியும். இதனை திருப்பூர் மாவட்ட பயனாளிகள் பெற்றுக்கொண்டு பயனடையலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment