ஜே.இ.இ. முதன்மை தேர்வுக்கு 30-ந்தேதி வரை விண்ணப்பிக்கலாம் ஜனவரி மாதம் தேர்வு நடக்கிறது - துளிர்கல்வி

Latest

Friday, November 3, 2023

ஜே.இ.இ. முதன்மை தேர்வுக்கு 30-ந்தேதி வரை விண்ணப்பிக்கலாம் ஜனவரி மாதம் தேர்வு நடக்கிறது

மத்திய அரசின் உயர்கல்வி நிறுவனங்களான ஐ.ஐ.டி., என்.ஐ.டி. மற்றும் ஐ.ஐ.ஐ.டி. இளநிலை பட்டப்படிப்பு மாணவர் சேர்க்கை, ஒருங்கிணைந்த நுழைவுத் தேர்வு (ஜே.இ.இ) அடிப்படையில் ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்படுகிறது. இந்த தேர்வு, ஜே.இ.இ. முதன்மை மற்றும் ஜே.இ.இ. அட்வான்ஸ் என 2 தேர்வுகளாக நடைபெறும். இந்த நிலையில், 2024-25-ம் கல்வியாண்டுக்கான ஜே.இ.இ. முதன்மை தேர்வு, வரும் 2024-ம் ஆண்டு, ஜனவரி 24-ந்தேதி முதல் பிப்ரவரி 1-ந்தேதி வரை நடைபெறும் என தேசிய தேர்வுகள் முகமை அறிவித்துள்ளது. 
இதுகுறித்து தேசிய தேர்வுகள் முகமை வௌியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- ஜே.இ.இ முதன்மை தேர்வு 2024-ம் ஆண்டு ஜனவரி 24-ந்தேதி தொடங்கி பிப்ரவரி 1-ந்தேதி வரை நடைபெறும். இதற்கு, விருப்பமுள்ள மாணவர்கள் https://jeemain.nta.ac.in என்ற அதிகாரபூர்வ இணையதளத்தில் வருகிற 30-ந்தேதி இரவு 9 மணிக்குள் விண்ணப்பிக்கலாம். முதன்மை தேர்வு முடிவுகள் பிப்ரவரி 12-ந்தேதி வெளியிடப்படும். தமிழ், ஆங்கிலம், இந்தி, தெலுங்கு, குஜராத்தி, கன்னடம், மலையாளம், மராத்தி உள்பட 13 மொழிகளில் ஜே.இ.இ. முதன்மை தேர்வு நடைபெறும். தேர்வுக்கு விண்ணப்பிப்பதில் சிரமங்கள் இருந்தால், மாணவர்கள் 011-40759000 அல்லது 011-69227700 என்ற எண்ணுக்கோ, jeemain@nta.ac.in என்ற இ-மெயில் முகவரிக்கோ தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment