எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு கல்வி உதவிக்கான தேர்வு விண்ணப்பிக்க அழைப்பு - ThulirKalvi

Latest

Search Here!

Saturday, December 2, 2023

எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு கல்வி உதவிக்கான தேர்வு விண்ணப்பிக்க அழைப்பு

எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு கல்வி உதவிக்கான தேர்வுதேர்வு விண்ணப்பிக்க அழைப்பு 

சென்னை, 
டிச.1: எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகைக்கான என்.எம்.எம்.எஸ். தேர்வு அடுத்த ஆண்டு பிப்.3-ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்ட நிலையில், தேர்வுக்கான விண்ணப்பங்களை வரும் திங்கள்கிழமை (டிச.4) முதல் பதிவிறக்கம் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டது. 

அரசுத் தேர்வுகள் இயக்ககம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு: நிகழ்கல்வியாண்டுக்கான தேசிய வருவாய் மற்றும் தகுதி படிப் புதவித் திட்டத் தேர்வு (என்.எம்.எம்.எஸ்) தமிழக அரசின் அங்கீகா ரம் பெற்ற அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு அடுத்த ஆண்டு பிப்.3-ஆம் தேதி சனிக்கிழமை நடைபெறவுள்ளது. 

இந்தத் தேர்வுக்கான வெற்றி விண்ணப்பங்களை டிச.4-ஆம் தேதி முதல் டிச.19-ஆம் தேதி வரை தேர்வுத் துறையின் இணையதளம் (www.dge.tn.gov.in) மூலமாக பள்ளிகள், மாணவர்கள் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். 

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் இணையவழி விண்ணப்பக் கட்டணத் தொகை ரூ.50 சேர்த்து மாண வர்கள் தாம் பயிலும் பள்ளித் தலைமை ஆசிரியரிடம் டிச.19-ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். இதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட மாட்டாது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த தேர்வின் மூலம் தமிழகத்தில் 6,695 பேர் உள்பட நாடு முழுவ தும் ஒரு லட்சம் மாணவர்கள் தேர்வு செய்யப்படுவர். அவர்களுக்கு 9-ஆம் வகுப்பு முதல் பிளஸ் 2 முடிக்கும் வரை மாதம் ரூ.1,000 உதவித் தொகை வழங்கப்படவுள்ளது.