கூட்டுறவு மேலாண்மை டிப்ளமோ பயிற்சிக்கு 29-ந் தேதி முன்பதிவு தொடக்கம் இணைபதிவாளர் தகவல் - ThulirKalvi

Latest

Search Here!

Friday, April 26, 2024

கூட்டுறவு மேலாண்மை டிப்ளமோ பயிற்சிக்கு 29-ந் தேதி முன்பதிவு தொடக்கம் இணைபதிவாளர் தகவல்

கூட்டுறவு மேலாண்மை டிப்ளமோ பயிற்சிக்கு 29-ந் தேதி முன்பதிவு தொடக்கம் இணைபதிவாளர் தகவல் 

மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் அருளரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- தமிழ்நாடு கூட்டுறவு ஒன்றியத்தின் அங்கமாக செயல்படும் நாமக்கல் கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில், 2024-25-ம் ஆண்டிற்கான முழுநேர கூட்டுறவு மேலாண்மை டிப்ளமோ பயிற்சி (டி.கோஆப்) நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டிற்கான, மேலாண்மை டிப்ளமோ பயிற்சிக்கு வருகிற 29-ந் தேதி முதல் முன்பதிவு தொடங்குகிறது. வருகிற செப்டம்பர் மாதம் தொடங்கி ஓராண்டு காலத்திற்கு இரண்டு பருவ முறைகளில் பயிற்சி நடைபெறும். பயிற்சிக்கான பாடத்திட்டம் தமிழில் மட்டுமே நடத்தப்படும். பயிற்சிக்கான குறைந்தபட்ச கல்வி தகுதி பிளஸ்-2 தேர்ச்சி பெற்று, 17 வயது நிறைவடைந்திருக்க வேண்டும். விருப்பமுடைய தகுதியானோர் www.tncuicm.com என்ற இணையதளம் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்ப தேதி, பயிற்சி கட்டண விவரங்கள் மற்றும் நிபந்தனைகள் இணையதளத்தில் வெளியிடப்படும். மேலும் விவரம் பெற, நாமக்கல்- சேலம் சாலையில் அமைந்துள்ள, நாமக்கல் கூட்டுறவு மேலாண்மை நிலையத்தை நேரில் அணுகலாம். இவ்வாறு அதில் கூறி உள்ளார்.