அரசு மேல்நிலைப்பள்ளிகளில் பணியாற்றும் உயர்கல்வி வழிகாட்டுதல் குழு உறுப்பினர்களுக்கு பயிற்சி - ThulirKalvi

Latest

Search Here!

Friday, April 26, 2024

அரசு மேல்நிலைப்பள்ளிகளில் பணியாற்றும் உயர்கல்வி வழிகாட்டுதல் குழு உறுப்பினர்களுக்கு பயிற்சி

தமிழக பள்ளிக்கல்வித்துறை இயக்குனர், அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:- தமிழகத்தில் அனைத்து அரசு மேல்நிலைப்பள்ளிகளிலும், நான் முதல்வன் திட்டத்தின் கீழ் மாணவர்களுக்கு உயர்கல்வி வழிகாட்டு குழு வாயிலாக தேவையான வழிகாட்டுதல்கள் வழங்கப்படுகின்றன. இந்த நிலையில், 2024-25-ம் கல்வியாண்டுக்கான உயர்கல்வி வழிகாட்டி குழு உறுப்பினர்களுக்கு பயிற்சிகள் வழங்க திட்டமிடப்பட்டு உள்ளது. முன்னதாக, உயர்கல்வி வழிகாட்டு குழு உறுப்பினர்களுக்கு பயிற்சிகள் வழங்கும், மாவட்ட கருத்தாளர்களுக்கான பயிற்சி, வருகிற 29, 30-ந்தேதிகளில் கொடைக்கானலில் உள்ள அன்னை தெரசா பெண்கள் பல்கலைக்கழகத்தில் நடைபெறும். மாநில கருத்தாளர்கள், மாவட்ட கருத்தாளர்களுக்கு தேவையான வழிகாட்டுதல்களையும், பயிற்சிகளையும் வழங்குவர். அதன்பிறகு, உயர்கல்வி வழிகாட்டுதல் குழுவுக்கான பயிற்சி, வருகிற மே 2-ந்தேதி முதல் 10-ந்தேதி வரை அந்தந்த மாவட்டங்களில் நடத்தப்படும். இவர்களுக்கு, மாவட்ட கருத்தாளர்கள் மாணவர்களுக்கான உயர்கல்வி வழிகாட்டுதல் தொடர்பான பயிற்சிகளை வழங்குவர். பயிற்சிகள் அந்தந்த மாவட்டங்களில் முறையாக நடைபெறுவதை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் உறுதி செய்ய வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.