அரசுப் பள்ளிகளில் திறன் மேம்பாட்டு போட்டிகள் கல்வித் துறை அறிவுறுத்தல் - துளிர்கல்வி

Latest

Monday, August 26, 2024

அரசுப் பள்ளிகளில் திறன் மேம்பாட்டு போட்டிகள் கல்வித் துறை அறிவுறுத்தல்

அரசுப் பள்ளிகளில் திறன் மேம்பாட்டு போட்டிகள் கல்வித் துறை அறிவுறுத்தல்!

அரசுப் பள்ளி மாணவர்களுக்கான திறன் மேம்பாட் டுப்போட்டிகளை உரிய வழிகாட்டுதலின்படி நடத்த வேண்டும் என்று பள்ளிக் கல்வித் துறை அறிவுறுத்தியுள்ளது. பள்ளிக் கல்வித் துறை இயக்குநரகம் சார்பில் அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கை: 
தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் திறனை மேம்படுத்தும் வகையில் வானவில் மன்றம், இலக்கிய மன்றம், சுற்றுச் சூழல் மன்றம், விநாடி-வினா மன்றம் உள்ளிட்ட பல்வேறு மன்றங்கள் செயல்பட்டு வருகின்றன. அதன் கீழ் பள்ளி அளவிலான போட்டிகள் ஒன்று முதல் 9-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கல்வியாண்டு அட்டவ ணையில் ஒதுக்கப்பட்ட பாடவேளைக்கு ஏற்றபடி அடுத்த ஆண்டு ஏப் ரல் மாதம் வரை நடத்த வேண்டும். 
இந்த செயல்பாடுகள் வாராந்திர அடிப்படையில் நடத்தப்படுவது அவசியம். இந்த போட்டிகள் அடுத்த டுத்து வட்டார, மாவட்ட, மாநில அளவில் நடைபெறும். இதில் அதிக அளவிலான மாணவர்களை பங்கேற்க ஊக்குவிக்க வேண்டும். போட்டிகள் நடைபெறுவதை முதன்மை, மாவட்டக் கல்வி அலு வலர்கள் உறுதிசெய்ய வேண்டும். மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் இதுதொடர்பாக அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும். இந்த அறிவுறுத்தல்களைப் பின்பற்றி அனைத்து வகை மன்ற போட்டிகளையும் சம்பந்தப்பட்ட மாவட்ட முதன்மைக் கல்வி அலுவ லர்கள் நடத்த வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது


No comments:

Post a Comment