தாகம் எப்போது ஏற்படுகிறது தாகம் எடுப்பது எதனால்? II குழல் பல்பு வெண்மையாக எரியக் காரணம் என்ன? - ThulirKalvi

Latest

Search Here!

Monday, June 29, 2020

தாகம் எப்போது ஏற்படுகிறது தாகம் எடுப்பது எதனால்? II குழல் பல்பு வெண்மையாக எரியக் காரணம் என்ன?

தாகம் எப்போது ஏற்படுகிறது தாகம் எடுப்பது எதனால்?


உடலில் நீர் நீரின் சம அளவு குறையும் போது அந்த அளவை சரிகட்ட மூளை நமக்கு தெரிவிக்கும் உணர்வே தாகம் எடுத்தல் ஆகும். மூளையின் கீழ்தளத்தில் ஹைப்போதளமஸ் என்ற பகுதி இருக்கிறது.  இங்கு உடல் நீர் சமநிலையை உணரும் உணர்வாங்கிகள் இருக்கின்றன. நீர் சமநிலை குறையும்போது இந்த தாகம் மையம் தூண்டப்பட்டு தாக உணர்வு ஏற்படுகிறது . அதனால் நீரை அருந்த முன் வருகிறோம்.  ஹைப்போதளமஸ் தாகமையம்  தூண்டப்படும்போது பிட்யூட்டரி சுரப்பிகள் தூண்டப்பட்டு ஆண்டி டையோரடிக் ஹார்மோன் வெளிப்படுகிறது.  இந்த ஹார்மோன் சிறுநீரகத்தில் உள்ள நெப்ரான்கள் மீது செயல்பட்டு அதிக நீர் சிறுநீர் மூலம் வெளியேறாமலும் தடுக்கிறது.  இந்த இரு காரணிகள் மூலம் உடலின் நீர் சமநிலை சரிக்கட்டப் படுகிறது.

குழல் பல்பு வெண்மையாக எரியக் காரணம் என்ன?


குறைந்த அழுத்தத்தில் ஆவி நிரப்பப்பட்ட குழலில் மின்னிறக்கம் காரணமாக புற ஊதாக் கதிர்கள் வெளிப்படுகின்றன இவை கண்ணுக்குப் புலப்படா குழலின் உட்புறத்தில் புற ஊதாக்கதிர்களை உட்கவர்ந்து ஒளிக்கதிர்கள் ஆக மாற்றக்கூடிய ஒளிர்வுப்பொருட்கள் பூசப்பட்டிருக்கும். இவற்றிலிருந்து கிடைக்கும் ஒளி எல்லா அலை  நீளங்களிலும் வெளிப்படுவதால் அவ்வொளி  வெண்மையாக  தெரிகிறது.

பூமியை வந்தடையும் புற ஊதாக் கதிர்கள் ஆபத்து விளைவிப்பதில்லையே ஏன்?



புற ஊதாக் கதிர்கள் நம் உடலுக்கு ஆபத்து விளைவிக்கக் கூடியவை தான். ஆனால் வளிமண்டலத்தில் உள்ள ஓசோன் போர்வை கதிரவனிலிருந்து வரும் புற ஊதாக் கதிர்களை பெருமளவில் வடிகட்டி விடுகின்றது.  எனவே நிலப்பரப்பில் வலுக் குன்றிய அளவில்தான் இவை வந்து சேர்கின்றன .அதனால் ஆபத்து விளைவதில்லை. உடல் தோலில் உள்ள கருமை நிற நிறமிகளும் புற  ஊதா கதிர்களின் தாக்கத்திலிருந்து நம்மை காக்கின்றன.

சிறுநீரக கற்கள் என்றால் என்ன அவை எப்படி தோன்றுகின்றன?


நாம் உண்ணும் உணவு பொருட்களிலும் குடிக்கும் நீரிலும் கால்சியம் மெக்னீசியம் ஆக்சலேட் பாஸ்பேட் யூரியா முதலிய உப்புகள் இருக்கின்றன. பொதுவாக தேவைக்கு அதிகமான உப்புகள் சிறுநீரக செயலியல் நிகழ்வால் சிறுநீர் மூலம் வெளியேறி விடும்.  செயலியல் பாதிப்பு தொற்று நோய்கள் , முதலிய காரணங்களாலும் உப்புகளின் அளவு அதிகமாகும் போதும் இத்தகைய உப்புகள் சிறுநீர் முழுமையாக வெளியேறாமல் சிறுநீர் பாதையில் தங்கும். சிறுநீரகம் சிறுநீர்ப்பை இவற்றை இணைக்கும் குழல்கள் போன்ற நுண் உறுப்புகளில்  உப்புகள் படிகம்போல படிந்து சிறுக சிறுக சேர்ந்து கல்போல பெரிதாகும். இதைத்தான் சிறுநீரக கல் என்கிறோம்.

சிறுநீர்ப்பையின் புரோஸ்டேட்டர் சுரப்பி  வீங்கிக் கொள்ளும் போது சிறுநீர் வெளியேறுவதில் தடை ஏற்படுவதாலும் சிறுநீரக கல் உண்டாகலாம்.  அடிக்கடி சிறுநீர் பாதையில் அலர்ஜி ஏற்படும் சிறுநீரக கல்  ஏற்பட வாய்ப்பு உண்டு.  பாரா தைராய்டு சுரப்பி ஹார்மோனை சுரக்க காரணமாக இரத்த கால்சியத்தின் அளவு கூடி சிறுநீரக கல் தோன்றும்.

தலைமுடி உதிர காரணம் என்ன அதை தடுக்க முடியுமா?


தலைமுடி உதிர்வது பல காரணங்களால் நிகழ்கிறது. கிருமிகள் காளான் நோய்கள், இரும்பு துத்தநாக சத்து குறைபாடு, புரத சத்து குறைபாடு, தைராய்டு பிட்யூட்டரி, அட்ரினல், டெஸ்டோஸ்டிரான் முதலிய ஹார்மோன் சுரப்பு விகிதம் மாறுபாடு மிகையான வைட்டமின் ஏ மாத்திரைகள் கருத்தடை மாத்திரைகள் ரத்த அழுத்தத்தை சமன் செய்யும்  பீட்டா தடை மருந்துகள் ரத்த உறைதலைத் தடுக்கும் மருந்துகள் ஆகியவற்றை அதிக அளவு  உட்கொள்ளுதல் சிபிலிக்ஸ் போன்ற நோய்கள் சிறுநீரக செயலிழப்பு நீரிழிவு தைராய்டு நச்சுத் நிலை மனக்கவலை மன அதிர்ச்சி குழந்தை பிறந்த பின்னர் மாதவிடாய் நின்ற பின்னர் தொடர் காய்ச்சலுக்கப் பிறகு போன்ற காரணங்களால் தலைமுடி உதிர்கிறது.  சரியான காரணத்தை அறிந்து சிகிச்சை செய்யலாம். 

மனித உடலில் தொப்புள் இருப்பதால் பயனுண்டா?

கருப்பையில் தாயுடன் ஒன்று சேர்ந்து இருந்தோம் என்பதை நினைவூட்டவே தவிர வேறு எதுவும் இல்லை.

கொசு கடித்ததால் தடித்து அரிப்பதேன்?

கொசு கடித்து இரத்தத்தை உறிஞ்சும் போது ரத்தம் உறையாமல் இருக்க அது ஒரு திரவத்தை நம் தோலில் துப்புகிறகிறது.  நம் உடம்புக்கு அந்த திரவம்  ஒரு அன்னியப் பொருள்.  அதனால் உடம்பு அதை ஏற்றுக்கொள்ளாமல் எதிர்க்கிறது .அந்த ஒவ்வாமையின் விளைவுதான் அரிப்பு ஏற்படுதல், தோல் தடித்து போதல். கொசு கடித்ததும் நம் தோலில் உள்ள மாஸ்ட் செல்களிலிருந்து இஸ்டமின் வெளி வருனிறது. இதுதான் நமக்கு அரிப்பை உண்டாக்குகின்றது.
இஸ்டமின் வெளிவருவதைப் பார்த்து அதை சுற்றி இருக்கம் தந்துகிகளிலிருந்து பிளாஸ்மா வெளியேறுகிறது. இதுதான் அரிப்பைத் தொடர்ந்து வரும் தடிப்பிற்குக் காரணம். ஆண்டி இஸ்டமின் மாத்திரையை உட்கொண்டுவிட்டால் தடிப்பு மறைந்துவிடும்.