தண்ணீரினால் வரும் நோய்கள் (தொடர் -1) - ThulirKalvi

Latest

Search Here!

Wednesday, July 22, 2020

தண்ணீரினால் வரும் நோய்கள் (தொடர் -1)

தண்ணீரினால் வரும் நோய்கள்  (தொடர் -1)

நாம் உயிர் வாழ உணவு தண்ணீர் சுத்தமான காற்று ஆகிய மூன்றும் அவசியம் என்பது அனைவருக்கும் தெரிந்ததே. 

நாம் குடிக்கும் தண்ணீர் சுத்தமானதாக இருத்தல் மிக அவசியம். அவ்வாறு தண்ணீர் சுத்தமாக இல்லாவிட்டால்,  அதனால் பல நோய்கள் வருவதற்கு வாய்ப்புகள் உண்டு. 

அத்தகைய நோய்களைப் பற்றியும் அவற்றைத் தடுப்பது பற்றியும் ஒவ்வொருவரும் தெரிந்துகொள்ள வேண்டும்.  தண்ணீரால் பரவும் நோய்கள் வயிற்றுப்போக்கு, வாந்தி பேதி, வயிற்றுக் கடுப்பு, டைபாய்டு காய்ச்சல், காலரா, இளம்பிள்ளை வாதம், மஞ்சள் காமாலை, குடல் புழுக்கள் உணவு நஞ்சாக நோய் எனப்படும். 

இந்நோய்கள் எதனால் வருகின்றன?

இந்த நோய்கள் பாக்டீரியா நுண்கிருமிகள் வைரஸ் கிருமிகள் போன்றவையால் ஏற்படும்.  இக்கிருமிகள் தண்ணீரில் கலந்து அந்த தண்ணீரைக் குடித்தால் நோய்களுக்கு ஆளாக நேரிடும்.  இந்த நுண்கிருமிகள் நாம் குடிக்கும் தண்ணீரின் வழியாக இறைப்பையை அடைந்து அங்கிருந்து குடலுக்குள் போய் தம் இனத்தை பெருகி நோய்களை ஏற்படுத்தும்.  

வயிற்றுப்போக்கு என்னும் வாந்தி பேதி 

வயிற்றுப்போக்கு வாந்தி பேதி சாதாரணமாக நமக்கு ஏற்படக்கூடிய நோய்தான். அசுத்தமான தண்ணீரை குடிப்பதாலும்,  கை சுத்தம் இல்லாததாலும் வரும். வாந்தி பேதி பல வகையான பாக்டீரியா வைரஸ் கிருமிகளாலும் குடல் புழுக்களால் ஏற்படும். இந் நோயின் அறிகுறிகள் எல்லாரும் அறிந்ததே.   

அடிக்கடி தண்ணீர் போல மலம் கழித்தல்,  வாந்தியெடுத்தல்,  வயிற்று பிரட்டல், வயிற்றுவலி, காய்ச்சல் வந்தது போன்ற உணர்வு,  உடல் சோர்வு,  மிகுதியான தாகம், கை கால்கள் வெளுத்து போதல், நாக்கு வறட்சி போன்றவை. 

இந்நோயினால்  உடலில் இருக்கும் தண்ணீர் எல்லாம் வெளியேறி மிகவும் சோர்வு ஏற்பட்டு தினசரி சகஜமாக செய்யும் பணியை செய்ய இயலாது. வயிற்றுப்போக்கு மிகுதியாக இருந்தால் உடலில் இருக்கும் நீர் கணிசமான அளவு வெளியேறி உடல்நீரிழந்த நிலை என்னும் நிலையினை அடைய வாய்ப்புகள் உண்டு. வயிற்று போக்கு முக்கியமாக குழந்தைகளுக்கு ஒரு உயிர்கொல்லி நோய் என்று கூட  சொல்லலாம்.

வயிற்றுப்போக்கும் மூடநம்பிக்கைகளும் 

வயிற்றுப் போக்கு இருக்கும் போது நம்முடைய பல மூட நம்பிக்கைகள் உண்டு அவற்றை தெரிந்து கொண்டு அந்த மூட நம்பிக்கைகளை மக்கள் மனதிலிருந்து அழித்துவிட நாம் முயலவேண்டும். குழந்தைகளுக்கு வயிற்றுப் போக்கு இருக்கும் போது உணவு கொடுப்பதையும் தண்ணீர் குடிப்பதை நிறுத்தி விடவோ அல்லது குறைத்துவிடவோ பல பெற்றோர்கள் செய்வர்.

பெரியவர்கள் வயிற்றுப்போக்கு ஏற்பட்டால் குணமாகிவிடும் என்று இருப்பர் 

குழந்தைகளுக்கு விபூதி மந்திரித்தல் தாயத்து கட்டுதல் போன்ற மாந்திரீக முறைகளை பெற்றோர்கள் பின்பற்றுவர். 

கசகசா அரை த்து கொடுத்தல், ஜிலேபியை கொடுத்தல் சில சோடா கலர்களை கொடுத்தல் போன்ற வற்றையும் குழந்தைகளின் வயிற்றுப் போக்கு இருக்கும் போது செய்வர். 

குடலேத்தம், குடல் தட்டுதல் என்று வயிற்று பகுதியினைத் தட்டுதல். இன்னும் கிராமப்புறங்களிலும் நகரங்களிலும் பின்பற்றக்கூடிய முறை தான்.

 இத்தகைய செயல்களை செய்வதால் மயம் சவயிற்றுக் கடுப்புக்கு வந்துவிடுகிறதே அது எதனால் என்று நமக்குச் சந்தேகம் வரக்கூடும்.

சாதாரணமாக பெரும்பாலான வயிற்றுப்போக்குக் காரணம் வைரஸ் நுண்கிருமிகள் தான்.  வயிற்றுப்போக்கு மூன்று அல்லது நான்கு நாட்களில் தானாகவே குணமாகிவிடும். இந்த காலகட்டத்தில் அதாவது இரண்டு மூன்று நாட்கள் ஆன பின்னரே தானாகவே நலமாக வேண்டிய நாள்களில்  மாந்திரிகர்களை நாடிப்போனாலும் சில கை வைத்தியங்கள் செய்தாலும் குணமாகிவிடும்.  இது குருவி உட்கார பனம்பழம் விழுந்த கதை போலத்தான்.

வயிற்றுப்போக்கின் போது செய்ய வேண்டிய முதலுதவிகள் என்ன?

வயிற்றுப்போக்கின் போது உண்ணும் உணவை எக்காரணத்தைக் கொண்டும் நிறுத்தக்கூடாது.  அதிகமாக தொடர்ந்து வாந்தி எடுத்துக் கொண்டிருந்தால் மட்டும் உணவு உண்ணுவதை தவிர்க்க வேண்டும்.  

உண்ணும் உணவு உடலுக்கு இதமானதாக அதாவது சாஃப்டானதாக இருப்பது நல்லது.  காரம் குறைவாக அல்லது காரமே இல்லாமல் தயிர் சாதம் மோர் சாதம் போன்றவற்றை சாப்பிடலாம்.  அரிசி உணவுகளை அதாவது இட்லி இடியாப்பம் போன்ற நீராவியில் வேகவைத்த உணவு வகைகளை சாப்பிடலாம்.  

இச்சமயங்களில் கோதுமை சம்பந்தப்பட்ட உணவுகளை தவிர்ப்பது நலமானேத 

வயிற்றுப் போக்கு இருக்கும் போது நிறைய வடிகட்டி கொதிக்க வைத்த தண்ணீரை குடிப்பது அவசியம்.  தண்ணீர், மோர்,  இளநீர்,  அரிசி,  கஞ்சி சாதம், வடித்த கஞ்சி,  அரோரூட் கஞ்சி , போன்றவற்றை நிறைய குடிக்கலாம்.

சர்க்கரை உப்புக்கரைசல் 

ஒரு டம்ளர் தண்ணீரில் அதாவது கொதிக்கவைத்து ஆறவைத்த தண்ணீரில் (ஒரு டம்ளர் அல்லது ஒரு கிளாஸ் என்பது 200 மில்லி அளவை குறிக்கும்) இரண்டு ஸ்பூன் சர்க்கரையும் ஒரே ஒரு சிட்டிகை உப்பையும் கலந்து இந்த சர்க்கரை உப்புக் கரைசல் தண்ணீரை அடிக்கடி குடித்து சொல்லவேண்டும்.  தண்ணீரை முடிய முடிய முடிய கலந்து குடித்து கொண்டே இருந்தால் உடலில் நீர் இழப்பு ஏற்பட்டு இருந்தால்  உடலில் நீர் இழப்பு ஏற்பட்டு இருந்தால் அது ஈடு செய்யப்பட்டு உடல் சோர்வு அதிகம் இருக்காது. இச்சர்க்கரை உப்புக் கரைசலுக்குப் பதிலாக சாதம் வடித்த கஞ்சியில் சிறிது உப்புப் போட்டும்  இளநீர் அரிசியை வறுத்து அரைத்து கஞ்சி காய்ச்சிக் கொடுத்தல் போன்றவையும் செய்யலாம்.

இச்சர்க்கரை உப்புக் கரைசலை கொடுத்து கொண்டே இருப்பதோடு பாக்டீரியா நுண்கிருமிகளால் ஏற்பட்டிருக்கின்ற தொற்றுநோய்க்கு உண்டான மருந்துகளை சாப்பிடுவது அவசியம். 

வயிற்றுக்கடுப்பு

 வயிற்றுக்கடுப்பு என்னும் நோயில் மலத்தோடு இரத்தமும் சளியும் அதாவது சீதமும் கலந்து போகும்.  வயிற்றுக் கடுப்பு ஏற்படவும் பாக்டீரியா மற்றும் பல நுண்கிருமிகளும் காரணமாயிருக்கும். 

வயிற்றுக்கடுப்பில் வயிற்றுவலி வந்த பின்னர் மலம் வரும்.  மலத்தோடு சீதமோ அல்லது இரத்தேமா இரண்டுமே கலந்து வரும்.  வயிற்று கடுப்பு நாம் சாதாரணமாக கேள்விப்படும் வகைகளில் ஒன்றுதான். 

ஒரு சிலருக்கு ஹோட்டலில் சாப்பிட ஓரிரு நாட்களிலே வயிற்று கடுப்பு ஏற்பட வாய்ப்புகள் உண்டு.  ஏனெனில் ஹோட்டலில் சாப்பிடும் போது சுத்தம் இல்லாத அமிபா என்னும் கிருமிகள் உணவுப்பொருட்களோடும் தண்ணீரோடும் கலந்து உடலினுள்  சென்று வயிற்று கடுப்பு ஏற்பட வாய்ப்புகள் உண்டு. 

வயிற்றுக்கடுப்பு இருப்பவர்கள் முறையான சிகிச்சை செய்துகொண்டு கொதிக்கவைத்து ஆறவைத்த தண்ணீரையே குடித்தால் நலம் பெறுவர்.