தண்ணீரினால் வரும் நோய்கள் (தொடர்-2) - ThulirKalvi

Latest

Search Here!

Thursday, July 23, 2020

தண்ணீரினால் வரும் நோய்கள் (தொடர்-2)

தண்ணீரினால் வரும் நோய்கள் (தொடர்-2)

டைபாய்டு காய்ச்சல் 

நீரினால் பரவும் கொடிய கொடிய நோய்களில் ஒன்றுதான் டைபாய்டு காய்ச்சல். காய்ச்சல் இரண்டு வயதுக்கு மேல் உள்ள குழந்தைகளில் இருந்து எந்த வயதினரையும் தாக்க வல்லது.  

இந்த டைபாய்டு காய்ச்சல் ஒரு வகை பாக்டீரியாவினால் வரக்கூடிய நோய் ஆகும். நோய்க் கிருமிகள் கலந்த தண்ணீரைக் குடித்து விட்டால் இக்கிருமிகள் குடல் முழுவதும் புண்ணினை ஏற்படுத்தி காய்ச்சல் வந்து விட செய்யும்.

டைபாய்டு காய்ச்சலின் அறிகுறிகள் 

இக்காய்ச்சல் இருப்பவர்களுக்கு தலைவலி,  லேசாக காய்ச்சலோடு  இந்நோய் ஆரம்பிக்கும்.  லேசான சளியும் இருமலும் ஒரு சிலருக்கு இருக்கும்.   வாந்தி வயிற்று வலி வயிற்றுப்போக்கு போன்றவை இருக்கும்.  உடலெங்கும் சிறிய  சிவந்த தடிப்புகளும் இருக்கும். ஒரு சில தினங்களில் காய்ச்சல் அதிகமான அளவு வரும்.  நாக்கெல்லாம் வெளுத்து காணப்படும். உடலெங்கும் சிறிய சிவந்த தடிப்புகள் ஒரு சிலர் இடையே காணப்படும். 

இந்நோயினை  இரத்தப் பரிசோதனைகள் மூலம் நிர்ணயம் செய்து முறையான சிகிச்சை செய்தால் முழுமையாக குணமடைய செய்து விடலாம். 

டைபாய்டு நோயாளிகளுக்கு உணவு முறைகள் 

இந்நோய் குடல் முழுவதும் சிறு சிறு புண்களை ஏற்படுத்தி விடுவதால் உணவு விஷயத்தல் சில முறைகளை கடைப்பிடிப்பது அவசியம்.  

இந்நோய்தான் என்று உறுதியாக நிர்ணயம் செய்து பின்னர் முறையான சிகிச்சையோடு முதல் இரண்டு மூன்று நாட்களுக்கு மிகவும் எளிதில் ஜீரணமாகக்கூடிய இதமான காரமில்லாத உணவுகளை கொடுப்பது நல்லது.

நீராகாரம்  எதுவாக இருந்தாலும் இட்லி, குழைந்த சாதம், தயிர் மோர் போன்றவற்றை கொடுப்பது நல்லது.  முதல் 4 நாள்களுக்கு காரம் கொஞ்சம் கூட கொடுப்பது நல்லது அன்று. பின்னர் நோய்  குணமாகும் காலக்கட்டத்தில் சிறிது சிறிதாக காரம் சேர்த்து உணவினை சாப்பிட சொல்லலாம்.

டைபாய்டு காய்ச்சல் வராமல் தடுப்பது எப்படி? 

டைபாய்டு காய்ச்சல் வராமல் தடுக்க தடுப்பூசி இருக்கிறது.  குழந்தைகள் முதல் பெரியவர் வரை யார் வேண்டுமானாலும் போட்டுக்கொள்ளலாம்.  இந்தத் தடுப்பூசியை குழந்தைகளுக்கு இரண்டாவது வயது முடிந்த பின்னர் போடவேண்டும்.  இத்தடுப்பு ஊசி போடப்பட்டத்திலிருந்து மூன்று வருடங்களுக்கு நோய் வராது.  ஆகவே இந்த ஊசியினை மூன்று வருடங்களுக்கு ஒருமுறை போட்டுக்கொள்வது நல்லது.

காலரா 

காலரா நோய் மழைக்காலங்களில் அதிகமாக வரக்கூடிய தண்ணீரினால் பரவக்கூடிய மிகவும் கொடிய நோயாகும். இந்நோயும் பாக்டீரியா நுண்கிருமிகளால் ஏற்படும் நோய்தான்.  மழைக்காலங்களில் இந்நோய் கிராமத்தில் ஒருவருக்கு வந்துவிட்டால் அந்த கிராமம் முழுவதும்  பாதிப்புக்கு ஆளாக வாய்ப்புகள் உண்டு.  ஆகவே அத்தகைய கால கட்டங்களில் இந்நோயைத் தடுக்க போர்க்கால நடவடிக்கைகள் தேவையாக இருக்கும்.  

காலரா நோயின் அறிகுறிகள் 

நோயின் அறிகுறிகள் திடீரென்று ஆரம்பிக்கும்.  தண்ணீர் போன்ற பேதி ஒரு நாளைக்கு 30 முதல் 40 முறை வரை ஆகும். அதோடு வாந்தியும் இருக்கும் மலத்தை பார்த்தால் சாதத்தில் இருந்து வடிகட்டப்பட்ட வடிநீர் போல இருக்கும், வெகு வேகமாக இந்த நோய் உடையவர்கள் நீரிழந்த நிலையை அடைந்துவிடுவார்கள்.  கண்கள் சொருகியும்,  நாக்கு வறண்டும் கன்னங்கள் ஒடுங்கியும் வயிறு உள்ளுக்குப் போயும், கண்கள் வறண்டும்,  கண்ணீர் அற்றும், தோலின் மீள்தன்மை  மிகவும் குறைந்ததும்,  உடலின் சூடு குறைந்து நாடித்துடிப்பு இல்லாத இருத்தலும் கடுமையான உடல் நீரிலிழைந்த  நிலையை குறிக்கும்.  பின்னர் கை கால்கள் சில்லுட்டும்,  சிறுநீர் வராமல் இருப்பது, வேகமாக சுவாசிப்பது, கை கால்கள் துவண்டு சுயநினைவை இழந்து விடும் விடுவார். 

முறையான சிகிச்சை செய்யப்பட வில்லை என்றால் இக்காலரா நோயினால் மரணமும்  ஏற்படக்கூடும். 

காலரா நோயினை நிர்ணயித்த உடனே  சிகிச்சை அளிப்பதோடு உடனே அந்த ஊரின் சுகாதார அதிகாரிகளுக்கு தகவல் அளிப்பது மிக அவசியம். ஏனில் இந்நோயை கட்டுப்படுத்த அவர்கள் உரிய நடவடிக்கை எடுப்பார்கள். 

காலரா நோயை தடுப்பது எப்படி?

வடிகட்டிய தண்ணீரை காய்ச்சி குடிப்பது,  மழைக்காலங்களில் தண்ணீர் தேங்கி நிற்பதைத் தவிர்ப்பது,  மலம் கழிக்க கழிப்பறைகளை உபயோகப்படுத்தலாம். அவசியம் கிராமப்புறங்களில் பல நீர்நிலைகளில் இருந்து தூரமாக கழிப்பிடங்களை ஏற்படுத்தி  அதில் மலம் கழிக்கச் செய்தல் வேண்டும்.  நோயை தடுப்பதற்கான தடுப்பூசிகள் உள்ளன தடுப்பூசிகளை 2 3 4 5 6 வாரங்கள் இடைவெளியில் போடுவது அவசியம்.


இளம்பிள்ளை வாதம்

இந்நோய் குழந்தைகளின் கை கால்களையும் உடம்பையும் வலுவிழக்கச் செய்து முடமாக்கி விடக் கூடிய நோயாகும்.  இதுவும் நீரினால் பரவும் நோய்களில் ஒன்றுதான். இளம்பிள்ளைகளுக்கு இந்த வாதம் ஏற்படுவதால்  நோய்க்கு இளம்பிள்ளை வாதம் என்று கூறுவர்.  இளம்பிள்ளை வாதம் வைரஸ் கிருமிகளால் ஏற்படக்கூடிய தாக்கும் 

இளம்பிள்ளை வாதம் அறிகுறிகள் 

இளம்பிள்ளை வாதம் ஏற்பட்டு விட்டால் குழந்தைகளுக்கு லேசான காய்ச்சல் உடல் வலி, தலைவலி, சளி அவ்வப்போது வயிற்று வலி போன்ற அறிகுறிகள் ஆரம்பத்தில் இருக்கும்.  சில குழந்தைகளுக்கு குமட்டல்,  வாந்தி, பேதி போன்றவை இருக்கும். இக்குழந்தைகள் முக்கியமாக தசைவலி அதிகமாக இருப்பதாக அழுவர்.  அத்தசை வலியின் காரணமாக அவர்கள் நடக்கவும் முடியாமல் படித்துக்கொண்டே இருப்பர்.  கழுத்திலும் முதுகிலும் வலி கழுத்து விறைப்பு போன்ற அறிகுறிகள் பின்னர் தோன்றும்.  உடம்பில் எந்த தசையை தொட்டாலும் வலிப்பதாக சொல்வார்கள்.  பின்னர் தசைகள் வலுவிழந்து கை கால்கள் எல்லாம் துவண்டுவிடும். கடுமையாக பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு மலச்சிக்கல் ஏற்படும். இந்நோயால் மூளையின் பெரும் பகுதி தண்டுவடம் பாதிக்கப்பட்டு உடலின் பல்வேறு பாகங்களில் தசைகளின் செயலிழப்பு ஏற்பட்டு வாதம் ஏற்படும்.  கடைசியாக சுவாச மண்டலத்தின் செயல்பாடு குறையும் ஏற்பட்டு குழந்தைகள் இறந்து விடுவர். மிகவும் பாதிக்கப் படாது இறக்குமளவு  போகாது பல குழந்தைகளுக்கு கையோ காலோ வாதம் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உண்டு.


இளம்பிள்ளை வாதத்தைத் தடுக்குமுறை

இளம்பிள்ளை வாதத்தைத் தடுக்க இளம்பிள்ளை வாத தடுப்பு சொட்டு மருந்து போடுவது அவசியம்.  இத்தடுப்பு சொட்டு மருந்தினை குழந்தை பிறந்த ஒரு வாரத்திற்கு ஒருமுறையும்,  பின்னர் குழந்தையை 45வது நாளில் இருந்து மாதம் ஒரு முறை இடைவெளியில் ஐந்து முறை போடுவது அவசியம். பின்னர் ஊக்குவிப்பு அளவினை குழந்தையின் ஒன்றரை வயதிலிருந்து இரண்டு வயதிற்குள் ஒருமுறையும் பின்னர் நான்கரை வயதிலிருந்து  ஐந்து வயதிற்குள்ளாக  ஒரு முறைய போடுதல் அவசியம். இத்தடுப்பு மருந்தினை அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் வாரந்தோறும் புதன் கிழமைகளில் இலவசமாக போடுகிறார்கள்.