பெண்ணுரிமைக்காக பாரதி ஆற்றிய அரும் தொண்டு - ThulirKalvi

Latest

Search Here!

Tuesday, September 8, 2020

பெண்ணுரிமைக்காக பாரதி ஆற்றிய அரும் தொண்டு

பெண்ணுரிமைக்காக பாரதி ஆற்றிய அரும் தொண்டு

பெண்களின் நிலை 

சமுதாயம் என்பது ஆணும் பெண்ணும் சேர்ந்ததே மக்களின் கூட்டத்தையே சமுதாயம் என்று கூறுவர் சங்க காலத்தில் ஆண்களும் பெண்களும் கல்வி வீரம் அரசியல் போன்ற பல துறைகளிலும் சிறந்து இருந்தனர் முப்பதிற்கும் மேற்பட்ட பெண்பாற் புலவர்கள் பாடிய பாடல் சங்க இலக்கியங்களில் உள்ளன. அவ்வையார் போன்ற பெண்மணிகள் அரசியல் துறையில் முத்திரை பதித்தனர். சம உரிமையுடன் ஆணும் பெண்ணும் வாழ்ந்த காலம் பொற்காலம் எனப் பட்டது இடைக்காலத்தில் ஆணுக்குப் பெண் அடிமை என்ற நிலை ஏற்பட்டுவிட்டது. சமய வாதிகளும் பெண்ணினத்தை பழித்தனர். 

பெண் என்பவள் ஆணின் தேவையை நிறைவேற்ற படைக்கப்பட்ட பிறவி என எண்ணினார்.  வாயிருந்தும் ஊமையாய் கண்ணிருந்தும் பார்க்க முடியாத குருடராய் பெண்கள் இருக்கும் நிலை ஏற்பட்டது.  அடுப்பு ஊதும் பெண்களுக்கு படிப்பு எதற்கு என்ற நிலை இருந்த தால் பெண் கல்வி மறுக்கப்பட்டது. இத்தகைய காலகட்டம் நீடுதுயில் நீக்கப் பாடிவந்த நிலா பாரதியார் சமுதாயத்தில் அடிமைகளாய் பெண்கள் நடத்தப்படுவது பாரதியாருக்கு வேதனையை உண்டாக்கியது. 

பெண் என்பவள் ஆணின் போகப்பொருளாக அவள் இறைவியின் மறுபடியும் பெண்மையை தெய்வமாக போற்ற வேண்டும் என்பது அவர் அசைக்க முடியாத எண்ணம் பாரதி கண்ட பெண் பாரதியார் சமுதாயத்தில் பெண்கள் நடத்தப்படும் நிலை கண்டு மனம் கொதித்தார் கல்வி மறுப்பு திருமணம் கைகூடும் ஐ போன்றன அடியோடு ஒழிய வேண்டும் என்பது அவர் தனியாக ஆசையாகும் சங்ககாலத்தில் பெண்கள் எவ்வாறு கல்வி வீரம் கலை அரசியல் போன்ற துறைகளில் சிறந்த அதே நிலை மீண்டும் வேண்டும் என்பதே பாரதியின் அதற்காகவே அவர் எழுதிய கவிதைகளை எழுதிக் குவித்தார் அவர் வாழ்ந்த காலத்தில் அவர் சொன்ன பாடிய செய்திகள் ஏராளமாக இருந்தன அவர் காலத்திற்குப் பிறகு அவர் என்னென்ன பாடினாரோ அவைகள் படிப்படியாக நிறைவேறி வருவதை நாம் இன்று காண்கிறோம் அவர் இருந்து அந்த காட்சிகளை கண்டு கிடைக்கவில்லையே என்பதுதான் குறை புதுமைப்பெண் பெண்ணிற்கு அச்சம் மடம் நாணம் பயிர்ப்பு போன்ற நான்கு குணங்கள் வேண்டும் என்று நமது நூல்கள் கூறுகின்றன ஆனால் பாரதியாரோ நாணும் அச்சமும் நாய்கட்கு வேண்டும் என்று பாடினார் பாரதியார் கண்ட பெண் நாணம் அச்சம் நீங்களாக இருக்க வேண்டுமாம் மதம் என்பதற்கு அறிந்தும் அறியாதது போல இருப்பது என்று பொருள் கூறுவர் என்ற இடத்தில் பாரதியார் பெரிது மாறுபடுகிறார் அறிந்தும் அறியாதது போல் இருத்தல் கூடாது வீரத்துடன் அவற்றை கூற வேண்டும் என்பதே அவர் கருத்து அறிவு என்றால் என்ன சென்ற இடத்தால் மனதை செலுத்தாமல் தீயவற்றில் செலுத்தாது நல்லவன் அவற்றில் செல்லுதல் என்று பொருள் கூறுவர் அத்தகைய அறிவு ஆண்கள் மட்டும் பெறவேண்டும் பெண்களுக்கு அறிவு வேண்டாம் என்பது மடமை என்று பாரதியார் எண்ணினார் அதனால் பெண்கள் அறிவு பெறுவதற்கு தடையாக இருப்பவை மூடர் என்று சாடுகிறார் ஆணும் பெண்ணும் நிகரென நிலை ஏற்பட வேண்டும் அவ்வாறு ஏற்பட்டால் மேலும் சிறக்கும் பெண் என்பவள் குனிந்த தலை நிமிராமல் பூமியை பார்த்தவாறு அடக்கமாக நடக்கவேண்டும் என்பது அக்கால நிலை பாரதியாரோ நிமிர்ந்த நன்னடை நேரான பார்வை அஞ்சாமை பல நூல்களையும் கற்றவர்க்கு அவர்களுக்கு வேண்டும் என்று கூறுகிறார் அறியாமை என்ற இருளில் சிக்கி வீட்டின் ஒரு மூலையில் ஒதுங்கி வாழும் நிலை இனியும் பெண்களுக்கு கூடாது அதை அடியோடு ஒழிக்க வேண்டும் என்று கூறுவதிலிருந்து அவர் பெண் இனத்தின் பால் கொண்டிருந்த பற்று நமக்கு தெரியும் சென்றிடுவீர் எட்டுத்திக்கும் கலைச்செல்வங்கள் கொணர்ந்திங்கு சேர்ப்பீர் என்று இருபாலருக்கும் பொதுவாகவே பாடினார் நம்மால் என்ன இயலும் நான் பெண்ணாகப் பிறந்தோம் என்ற நிலை நீங்கி விட வேண்டும் நம்மால் அனைத்து மேலும் நம் சமூகமும் சமுதாயத்தில் ஒரு அங்கமே என்ற எண்ணம் கொண்ட புதுமைப்பெண்கள் நாடெங்கும் பலர் தோன்ற வேண்டும் என்பது அவர் கொள்கை

பெண்மை வெல்க பெண்மை வாழ்க பெண்மை வெல்க என்று பாடுவதில் இருந்து பெண்ணினத்தின் மீது பாரதி கொண்ட ஈடுபாட்டை அறியலாம் துன்பங்கள் தீர்வது பெருமையினால் சூரப் பிள்ளைகள் தாயென்று போற்றுவோம் என்று பாடி பெண்மையை வாழ்த்தினார் மனிதனுக்கு உயிர் தான் பெரியது என் உயிர் போனாலும் இதை செய்ய ஏன் என்று மக்கள் கூறுவது கண்கூடு பெண்மை என்பது உயிரினம் இனிது ஆகும் நம்மையும் அந்த பாதைக்கு அழைத்து செல்லும் அவர் ஒரு புனிதமான கவிஞர்

விடுதலைக் கும்மி தமிழ் இலக்கியங்களில் நாட்டுப்புற பாடல்களும் இன்று ஒரு காலத்தில் நாடோடி பாடல்கள் என்று இகழ்ந்து பேசி புறக்கணித்தனர் ஆனால் பாரதியாரோ அன்றே கும்மிபாடல்கள் பெண்கள் விடுதலையை பாடினார் தமிழகம் முழுவதும் குலுங்கும் ஆறு குணங்கள் என்று பாடி பெண்களுக்கு நம்பிக்கை ஒளியை ஊட்டி ஊக்கப்படுத்தினார் ஏடுகளை பெண்களும் பாவம் அவர்கள் அடுப்பங்கரை உத்தியோகம் பார்த்தால் போதும் என்ற நிலை அன்று இருந்தது எனவே அத்தகைய எண்ணம் கொண்டவர்கள் ஒளிந்தனர் வீட்டிலே பெண்களை போட்டு நிலையை அடியோடு ஒழிப்போம் என்று அவர் பாடியது இன்று நடைமுறைக்கு வந்துள்ளது மாட்டை அடித்து துன்புறுத்துவது போன்ற நிலை ஒழிய வேண்டும் என்று எண்ணியதால் அதை அடியோடு ஒழித்து விட்டோம் என்று பாடி பெண்களை சிந்திக்க வைத்தார் நாயே நல்ல நிலைக்கு விற்பவர் தன்னிடம் அதனிடம் கேட்காமல் இருப்பது சரி பெண்ணை எப்படி நடத்துவது சரி என்று இனி அது நடக்காது அதை ஒழிப்போம் என்று விடுதலை பூமியை பாடினார்

பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும் பாரினில் பெண்கள் நடத்த வந்தோம் என்று பாரதி பாடிய பாடல் அணிகள் இன்று பொன்னேட்டில் வைத்து போற்றுகிறது பெண்கள் பட்டதாரிகளாக மருத்துவராக வழக்குரைஞராக அமைச்சராக தொண்டு புரிவதே இன்று நாம் காண்கிறோம் பெண்களும் இந்த மாற்றத்தை ஏற்படுத்த காரணமாக பாரதியை என்றும் போற்றவேண்டும் தொட்டிலை ஆட்டும் கை தொல்லுலகை ஆட்டும் கை பெண்கள் கை என்பது நடைமுறையில் உள்ளது பெண் என்பவள் ஆணுடன் இல்லறத்தில் ஈடுபட்டு கணவனுக்கு எல்லா நிலைகளிலும் உறுதுணையாக இருந்து உதவி செய்ய வேண்டும் இத்தகைய புதுமைப்பெண்கள் தோன்ற வேண்டும் என்ற காரணத்தால்தான் பெண்கள் விடுதலைக் கும்மி பாடினர்

பெண்களும் பாரதியும் கிராமங்களில்கூட என்று சிறுமியரை பள்ளிக்கு அனுப்பி படிக்க வைக்க மனப்பக்குவம் ஏற்பட்டுள்ளது பெண் படித்து என்ன செய்யப்போகிறாள் என்று கேட்டவர்கள் இன்று வாயடைத்து நின்றனர் முத்துலட்சுமி ரெட்டி யார் மருத்துவர் ஆனதற்கு எத்தனை தடைகளை எதிர்கொள்ள நேர்ந்தது அவரை ஒரு சான்றாகக் கொண்டு பெண்கள் எல்லா நிலைகளிலும் உயர வேண்டும் என்பதே பாரதியின் உள்ளக்கிடக்கை பெண்களை அடித்து உதைத்து துன்புறுத்தி வந்த காலம் மலையேறிவிட்டது

 மகளிர் காவல் நிலையம் ஏற்பட்டு இன்று பெண்களுக்கு ஓரளவு விமோசனம் ஏற்பட்டுள்ளது.  இதை பாரதி கூறவில்லை எனினும் பாரதி கண்ட புதுமைப்பெண் மேலும் பல நிலைகளிலும் உயரவேண்டும் இந்தியப் பெண்கள் உலக அளவில் அறிவியல் போன்ற துறைகளில் உயரவேண்டும் பாரதி திரும்பி வந்தால் பாரதியார் நம்மைவிட்டுப் பிரிந்து 70 ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது பாரதி திரும்பி வரும் சூழல் ஏற்பட்டால் அவர் உள்ளம் எத்தகைய பெருமிதம் அடையும் ஆண்களுடன் பெண்கள் சமம் என்ற நிலை உள்ளது பரவப் படுவார் 

சொத்து உரிமை பெண்களுக்கு மறுக்கப்பட்ட காலம் ஒன்று உண்டு இன்றோ பெண்களுக்கும் சொத்துரிமை உண்டு அல்லவா ஆசைக்கு ஒருபெண் ஆஸ்திக்கு ஒரு பிள்ளை என்ற பழமொழி இன்று மலையேறிவிட்டது மகளிருக்கு என்று தனியாக அன்னை தெரேசா பெயரால் பல்கலைக்கழகம் ஏற்பட்டுள்ளமை கண்டு மலைத்துப் போவாரோ? 

அரசியல் உலக அளவிலும் இந்திய அளவிலும் பெண்கள் பங்கு என்ன என்பதை அறிந்து அவரை இறந்துபோவார் பருவமடைந்த பெண்களை பள்ளிக்கு அனுப்பக் இருந்த காலம் போய் பெண்களும் சிற்றூர்களில் படித்து பயன் பெறு வதை கண்டு பரவசம் அடைவர்.  என்றாலும் கணவன் புல்லானாலும் புருஷன் என்பது அக்கால பழமொழி இன்றோ தன் உரிமை பறிபோகிறது என்ற பெண் சிங்கங்கள் உள்ளதை கண்டு மெய்சிலிர்த்துப் போனார். 

நான்கு சுவர்களுக்குள் அடங்கி கணவனை எதிர்த்துப் பேசாமல் இருந்த காலம் போய் மூன்றில் 1 பங்கு பஞ்சாயத்து தலைவராக மேயராக நகரசபை தலைவராக உறுப்பினராகத் அழைத்துப் போவார் கணவன் இறந்தால் மனைவி காலமெல்லாம் விதவை கோலம் பூண்டு விட்ட காலம் மாறக் கூடிய சூழல்.  படிப்படியா வளர்ந்து வருகிறது.  விதவைப் பெண்களுக்கு மறுமணம் என்பதை அனைவரும் ஏற்கும் காலம் வந்துவிட்டதே இதை கண்டு அவர் உள்ளம் துள்ளி எழும் இன்னும் பல மாற்றங்கள் ஏற்பட்டு வரும் என்பதில் இரண்டு கருத்துக்கு இடமில்லை இத்தகைய மாற்றங்களுக்கு காரணமாக இருந்த பாரதியும் அவர் கவிதைகளும் காலத்தால் அழியாதவை அவற்றை முழுமையாக கற்று பயன் தருவது நம் கடமை