நீதித்துறையில் வேலை | 3557 பணியிடங்கள் | விண்ணப்பிக்க கடைசி தேதி: 6-6-2021. - ThulirKalvi

Latest

Search Here!

Saturday, April 24, 2021

நீதித்துறையில் வேலை | 3557 பணியிடங்கள் | விண்ணப்பிக்க கடைசி தேதி: 6-6-2021.

நீதித்துறையில் வேலை


தமிழக அரசு நீதித்துறை ஆட்சேர்ப்பு முகமை சார்பில் சென்னை ஐகோர்ட்டு உள்பட தமிழகத்தில் உள்ள பல்வேறு நீதி மன்றங்களில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர், நகல் எடுப்பாளர், தூய்மை பணியாளர், சுகாதார பணியாளர், காவலர், இரவு காவலர், துப்புரவு பணியாளர், மசால்ஜி உள்பட பல்வேறு பணி பிரிவுகளில் 3557 பணி இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. 


அலுவலக உதவியாளர், நகல் எடுப்பாளர் பணிக்கு 8 வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 10-ம் வகுப்பு படித்தவர்களும் விண்ணப்பிக்கலாம். மற்ற பதவிகளுக்கு குறைந்தபட்ச கல்வி தகுதி தேவையில்லை. அதேவேளையில் தமிழ் மொழியை எழுத, படிக்க தெரிந்திருக்க வேண்டும். எழுத்து தேர்வு, நேர்காணல் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். விண்ணப்பிப்பதற்கான வயது, வயது தளர்வு சலுகை, மாவட்ட வாரியாக காலி பணி இட விவரம், ஆன்லைனில் விண்ணப்பிக்கும் நடைமுறை போன்ற விரிவான விவரங்களை https://www.mhc.tn.gov.in/ என்ற இணைய தளத்தில் தெரிந்து கொள்ளலாம். விண்ணப்பிக்க கடைசி தேதி: 6-6-2021.