தமிழ்நாடு சுகாதாரத் திட்டம் - ஒருங்கிணைந்த முதலமைச்சரின் விரிவான மருத்துவக்
காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் அனைத்து வகையான கோவிட்-19 தொற்று சிகிச்சைகள் தனியார்
மருத்துவமனைகளில் இலவசமாக அளிக்க ஆணை வெளியிடப்படுகிறது.
மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்(அஉதி-1) துறை
அரசாணை (நிலை) எண்:231
நாள்: 07.05.2021
திருவள்ளுவர் ஆண்டு: 2052
பிலவ, சித்திரை - 24
படிக்கப்பட்டவை:
அரசாணை (நிலை) எண்.240, மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத் (அஉதி|-1) துறை,
நாள்.05.06.2020,
2. அரசாணை (நிலை) எண்.290, மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத் (அஉதி|-1) துறை,
நாள்.03.08.2020,
3. அரசாணை (நிலை) எண்.433, மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத் (அஉதி|-1) துறை,
நாள்.28.10.2020.
4. அரசாணை (நிலை) எண்.578, மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத் (அஉதி|-1) துறை,
நாள்.29.12.2020.
மேலும் படிக்கப்பட்டது:
5. திட்ட இயக்குநர், தமிழ்நாடு சுகாதாரத் திட்டம், கடித எண்.1887/தசுதி/காப்பீடு 1/2020,
நாள்.05.05.2021.
ஆணை:
தமிழக அரசு அனைத்து மக்களின்
நலனை மேம்படுத்தும் நோக்குடன்,
ஒருங்கிணைந்த முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் மூலமாக
இலவச மருத்துவச் சேவைகளை செயல்படுத்தி வருகிறது.
2. உலக சுகாதார அமைப்பு, தற்போதுள்ள கோவிட் தொற்று பாதிப்பினை உலகளாவிய
பொது சுகாதார பேரிடராகவும், இது கட்டுப்படுத்தக் கூடிய நிகழ்வாகவும் அறிவித்துள்ளது.
இதனடிப்படையில், தமிழக அரசு பொது சுகாதார சட்டத்தின் கீழ் தமிழகம் முழுவதும் இந்த
கோவிட்-19 தொற்று பட்டியலிடப்பட்ட நோயாக அரசிதழில் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
மேலும் இந்த கோவிட்-19 தொற்றுப் பரவலைத் தடுக்கும் நோக்குடன் பெருவாரியாக பரவும்
தொற்றுச் சட்டம்-1897-ன்படி வழிகாட்டு வழிமுறைகளும் வெளியிடப்பட்டுள்ளது. மேலும்
வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைச் சட்டம் 2005-ன் படியும், கோவிட்-19 தொற்று முன்னெச்சரிக்கை மற்றும் தடுப்பு வழிகாட்டு முறைகளும் வெளியிடப்பட்டுள்ளன
No comments:
Post a Comment