தமிழ்நாடு பள்ளிக்கல்வி இணை இயக்குநரின் (நாட்டுநலப் பணித்திட்டம்)
செயல்முறைகள், சென்னை -6
பொருள்:
பார்வை:
ந.க.எண்.004210/எம்/இ4/2022
நாள். .08.2023
பள்ளிக் கல்வி - 2022-23 - ம் கல்வியாண்டின் மத்திய அரசின்
உதவித்தொகை திட்டம் - தேசிய வருவாய் வழிதிறன் தேர்வு (National
Means cum- Merit Scholarship Scheme) விண்ணப்பித்த மாணவ /
மாணவியரின் விண்ணப்பங்கள் இணையதளத்தில் ஆதார் எண்ணை
இணைத்தல் மற்றும் திருத்தங்கள் மேற்கொள்ளுதல்- சார்பு.
மத்திய கல்வித் துறை, சாஸ்த்திரி பவன், புதுடில்லி, கடிதம் F.No. SS-
15/8/2022-Scholarship-MoMA
பார்வையில் தெரிவிக்கப்பட்டுள்ளவாறு மாணவர்களுக்கு உரிய தொகை
வங்கிக் கணக்கில் சென்றடைய ஏதுவாக மாணவர்களது ஆதார் எண்களை வங்கிக்
கணக்குடன் இணைத்திடவும், மாணவர்கள் பதிவேற்றம் செய்த விண்ணப்பங்களில்
(2022-23) உள்ள திருத்தங்கள் மேற்கொள்ள 10.08.2023 வரை காலநீட்டிப்பு
வழங்கப்பட்டுள்ளது.
எனவே, தேவைப்படும் நேர்வுகளில் மாணவர்கள் தங்கள் தனிப்பட்ட
உள்நுழைவில் ( Applicant's login) திருத்தங்களை மேற்கொள்ள தலைமை ஆசிரியர்கள்
வழியே தொடர்புடைய மாணவர்களுக்கு அறிவுறுத்திடுமாறு அனைத்து மாவட்ட
முதன்மைக் கல்வி அலுவலர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மேலும், தொடர்புடைய
மாணவர்களுக்கு உரிய
தகவல் தெரிவிக்கப்பட்டமைக்கான விவரத்தினை
தலைமையாசிரியர்களிடமிருந்து பெற்று ஆவணமாக பராமரித்திட முதன்மைக் கல்வி
அலுவலர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
இணைப்பு: பார்வைக் கடிதம்
பெறுநர்:
அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள்.
இணை இயக்குநர்டிகாம்
நாட்டு நலப்பணித் திட்டம்
ஆ.ஆர்23

No comments:
Post a Comment