பார்வைக் குறைவு ஏன் ஏற்படுகிறது? - ThulirKalvi

Latest

Search Here!

Sunday, June 28, 2020

பார்வைக் குறைவு ஏன் ஏற்படுகிறது?

பார்வைக் குறைவு ஏன் ஏற்படுகிறது?

கண் தசைகள் ஏன் சுருங்குகின்றன வலுவிழக்கின்றன என்பதை  கண்டறிந்தால் பார்வை குறைவின் அடிப்படை காரணம் தெளிவாகிவிடும் . 
டாக்டர் பேட்ஸ் பார்வைக் குறைவு ஏற்பட ஒரே காரணம் மூளை தான் கூறுகிறார் மூளைப்பளுதான் என்று கூறுகிறார்.

மூளை அளவுக்கு மீறி வேலை செய்தால் அதே அளவு  பளுவை கண்ணுக்கும் அதன் தசைகளுக்கும் தருகின்றது. அந்தப் பளு காரணமாகத்தான் தசைகள் வலுவடைகின்றன என்று அவர் காரணம் காட்டுகிறார்.

 அதிக உணர்ச்சி வசப்பட்டவர்கள் மூளைக்கு அதிக வேலை கொடுத்தால் அது களைப்பைடந்துப் போகிறது. அதனால் பார்வை குறைவு ஏற்படுகின்றது. கவலை, அச்சம், ஏக்கம் போன்ற உணர்ச்சி ஆகியவற்றுக்கு ஏற்ப பார்வை குறையை உண்டாக்குகின்றன.  எனவே நோயாளியின் மூளை ஓய்வு பெற்றான் அவருடைய கண்களும் கண்ணுடன் தொடர்புகொண்ட நரம்புகளும் தசைகளும் ஓய்வு பெறுகின்றன.  அதைத்தான் டாக்டர் பேட்ஸ் உள்ளமும் ஓய்வு பெற்றால் தான் பார்வை குறைவை போக்க முடியும் என்று தெளிவுபடுத்தி இருக்கிறார்.

மூளைப்பளு ஒன்றுதான் பார்வைக்குறைவு ஏற்படுத்துகின்றன என்று எண்ணிவிடக்கூடாது.  அவ்வாறு எண்ணுவது மனித உடலமைப்பை சரியாகப் புரிந்து கொள்ளாததால் ஏற்படும் தவறு.  மூளைக்கும் கண்ணுக்கு மட்டுமே தொடர்பு இல்லை கண்ணுடன் மற்ற உறுப்புகளும் தொடர்பு இருக்கிறது மூளையை போலவே மற்ற உறுப்புகளும் வலுவின்மை கண்ணைப் பாதிக்கும் அதனால் பார்வை குறைவு ஏற்படும்.

எனவே ஒவ்வொரு வகையான கண் தொந்தரவையும் சிறந்த முறையில் குணப்படுத்த வழிமுறைகள் இதில் குறிப்பிட்டு இருக்கிறேன். 

சத்தில்லாத உணவினாலும் பார்வை குறைவு ஏற்படுகின்றது

உடல் முழுவதும் ஒரே அமைப்பு கொண்டது.  உடலை வருத்தும் ஒவ்வொரு நோயும் கண்ணையும் வருத்தம் ஒவ்வொரு நோயும் கண் நோயும் வருத்தும் .
நீரிழிவு சிறுநீரகங்கள் தொடர்புள்ள நோய்கள் ஆகியவை கண்களை பாதிக்கின்றன.  நீரிழிவு காரணமாகத்தான் கண்களில் நீர் வடிதல் கண் படலம்  (Cataract) போன்ற நோய்கள் ஏற்படுகின்றன. கண்களிலே புள்ளிகள் தென்பட்டால் கல்லீரல் கோளாறினாலோ செரிக்காமை கண்களுக்கும் உடலுக்கும் உள்ள நெருங்கிய தொடர்பைக் காட்டுகின்றன.  ஆனாலும் நம்முள் பலர் இந்த உண்மையை உணர்வது கிடையாது.கண் உடல் நோய்களால் பாதிக்கப் படாது என்றே எண்ணி வருகின்றனர். அது தவறு.

 உடலில் ஏதாவது நோயோ, கோளாறோ ஏற்பட்டால் அது கண்ணில் தெரியும். உடலில் ஏற்படும் ஒவ்வொரு நோயும் கண்ணில் ஏதாவது ஒரு மாறுதலை ஏற்படுத்தும். சில நோய்கள் ஏற்பட்டால் கண் நிறம் மாறும் சில நோய்கள் ஏற்பட்டால் கண்களில் புள்ளிகள் தோன்றும். இப்படி உடலில் ஏற்படும் ஒவ்வொரு நோயையும் கண்ணின் மூலம் கண்டறியமுடியும். உடலின் ஒவ்வொரு உறுப்பும் கண்ணுடன் நேரடியாகவோ வேறு வகையிலோ தொடர்பு கொண்டிருக்கின்றன.

 உடலில் ஒரு நோய் ஏற்பட்டால் அது எப்படி கண்ணை பாதிக்கின்றது அப்படித்தான் கண்ணில் ஒரு நோய் பற்றினால் அது உடலையும் பாதிக்கிறது.

 இந்த பெரும் உண்மையை நாம் மறந்துவிடக்கூடாது. கண் எரிச்சல் முதலியவை கண்ணில் ஏற்பட்ட கோளாறினால் மட்டும் ஏற்படுவது கிடையாது.  உடலில் புரோட்டீன் சர்க்கரை ஆகியவை அதிகமாக இருப்பதால் கண் எரிச்சல் போன்ற நோய்கள் ஏற்படுகின்றன.  ஸ்டார்ச் புரோட்டின் முதலியவை இன்னும் அதிகமானால் கண்ணில் நீர் வடிதல் புரை வளருதல் போன்றவை ஏற்படும். அதன் கொடிய நிலையில் கண் குருடாகும்.

 சரியான அளவில் சத்துள்ள உணவு முறை அமையாவிடில் மேற்கூறிய கண் கோளாறுகள் ஏற்படுகின்றன. அதோடு பண்ணின் அமைப்பையும்  வேலை முறையையும் பாதிக்கும். சரியான முறையில் ஒழுங்கு படுத்தப்படாத உணவு ரத்த ஓட்டத்திலே தடை ஏற்படுகின்றது.  ரத்த நாளங்களை பாதிக்கிறது. எனவே, உணவு சரியான அளவில் உட்கொள்ளாவிடில் அது வயிற்றை மட்டும் தான் பாதிக்கும்.  வயிற்றுக் கோளாறுகள் மட்டுமே ஏற்படும் என்பது தவறு.

 உணவு முறை சரி இல்லாவிடில் அது உடல் முழுவதும் பாதிக்கும். உடல் முழுவதும் பாதிக்கும் போது அதில் ஒரு உறுப்பு பாதிக்கப்படும் என்பதை கூறத் தேவையில்லை தசைகளும் ரத்த நாளங்களும் பழுதடைந்தால் ரத்த ஓட்டம் சரியாக நடைபெறாது. மென்மையாக இருக்கும். தசைகள் இறுகி கெட்டியாகி விட்டால் சுருங்கி விட்டது. கண்ணின் பார்க்கும் தன்மையை பாதிக்கும் கண்ணின் உருவம் கூட இதனால் பாதிக்கப்படும். கண்ணின் உருவத்தில் மாறுதல் ஏற்பட்டால் அது பார்வை குறைவை ஏற்படுத்துகிறது.

முட்டை பால் பப்பாளி மாங்காய் தக்காளி மீன் கேரட் முருங்கைக் கீரை இவை அனைத்தும் கண்களைக் காப்பாற்ற உதவுகிற உணவுப் பொருள்கள் ஆகும்

(தொடர்ந்து அடுத்து வரும் பதிவுகளில் படிக்கலாம்)