கோழி குஞ்சு - சிறுவர்களுக்கான சிறுகதை - துளிர்கல்வி

Latest

Wednesday, August 26, 2020

கோழி குஞ்சு - சிறுவர்களுக்கான சிறுகதை

கோழி குஞ்சு - சிறுவர்களுக்கான சிறுகதை


கீச் கீச்சென்று 9 கோழி குஞ்சுகள் மேய்ந்துகொண்டிருந்தன. பஞ்சு போன்ற மென்மையான கோழிக்குஞ்சுகள்.  தத்தி தத்தி நடக்கும் அழகே தனி அழகு. அத்தனையும் தாயே சுற்றி சுற்றிவரும்.  தாய் கொத்திப் போட்டதைதான் தின்னும்.  தாய்க்கோழி தானியங்களை உடைத்துப் போடும்.  பொடியாக்கி போடும்.  இப்போது அந்த குஞ்சுகளுக்குத் தீனி தின்னத் தெரியாது.  

தெரியாது,  தெரியாது. தாயும் மிகுந்த எச்சரிக்கையுடன் உணவு தேடும்.  கிடைத்த உணவை குஞ்சுகளுக்கு கொடுக்கும்.  அடிக்கடி கழுத்தை உயர்த்தி பார்க்கும்.  மிக மெல்லிய சத்தம் கேட்டாலும் கழுத்தில் இருக்கும்.  இதோ இதோ உணவு இரவு உணவு குஞ்சுகள் ஓடிவரும்.  தாய்க் கோழி கொத்தி போடுவதை பார்க்கும்.  கீச்கீச் சத்தம் பார்க்கும்.  கீச் கீச்சென்று அதை கொத்தி தின்னும். 

தூரமாகப் போன கோழிக்குஞ்சு


சில குஞ்சுகள் உணவு தேடி தூரமாகப் போய் விட்டன.  இன்று தாய் கோழியிடம் குஞ்சுகள் பறந்து வந்தன. பூக்கள்  நிறைந்த தோட்டம்.  அங்கு சுற்றி சுற்றி மேய்ந்தன.  அங்கு ஒரு கிண்ணத்தில் நீர் இருந்தது.  அந்த நீரில் வாயை அலகை விட்டன.  கழுத்தை மேலே உயர்த்தவும் செல்லும் அளவு நீரை குடித்த இவ்வாறு துளித்துளியாய் குடித்தன.  

தாய்க்கோழி


தாயைப் பார்த்து பார்த்து குஞ்சுகள் கீழே இருந்த தானியங்களைக் கொஞ்சம் தின்றன. இந்த நிலையில் அங்கிருந்த  துளிர்களை கொஞ்சம் சென்றன.  புழு பூச்சிகளைத் என எல்லாம் கலந்து கின்றன.  அவை எல்லாமே தாய்கக் கோழி கால் மேல் குதித்தன ஓய்வு எடுத்தன.  அப்போது ஒரு குஞ்சு தாயின் மேல் ஏறி வழுக்கி விழுந்தது. கொண்டையை ஒன்று கொத்தியது.  ஒன்று தாயின் காலடியில் ஊர்ந்து சென்றது.  கோழி பொருமையாக இருந்தது.  

நாயையும் பாம்பையும் எதிர்த்த தாய்க்கோழி


அப்போது ஒரு நாய் வந்தது.  ஒரு கோழிக்குஞ்சை துரத்தியது.  அந்த நாயை கோழி கோபமாய் கொத்தியது.  நாய் பயந்து ஓடியே போனது.  இரண்டு வாரங்கள் கடந்தன. ஒரு நாள் ஒரு பாம்பு மெல்ல ஊர்ந்து சென்றது அது விரல் மொத்தம் இருந்தது.  அதை பார்த்து கோழி குஞ்சுகள் பயந்து ஓடி ஓடி வந்தது.  பாம்பின் கண்ணைக் கொத்தியது.  பாம்புக்கு இப்போது  வழி தெரியவில்லை.  கோழி பாம்பு கொத்தி முன்னும் பின்னும் ஆடியது பாம்பை துண்டு துண்டாக்கி போட்டது கோழி துண்டுகளை தூக்கி தூக்கி போட்டது.  அதன் பிறகு கோழி குஞ்சுகள் அருகில் வந்தன.  ஆளுக்கொன்று கொத்திக் கொண்டு ஓடின.  மற்ற குஞ்சுகள் அவற்றை சுற்றின.  மாலை ஆகிவிட்டது.  கொசுக்கள் பறந்து வந்தது. தாய்க்கோழி அவற்றைப் பிடித்து கீழே போட்டது.  அதனை கோழிக்குஞ்சுகள் போட்டி போட்டுக்கொண்டு கொத்தின.  இப்போது இருட்டு நேரம் அந்த தோட்டத்தின் முன்புறம் ஒரு குடிசை வீடு.  அந்த வீட்டின் கூரை ஓரம் ஒரு கோழி கூண்டு.  கோழி கூண்டு அனைத்தும் நோக்கி சென்றன.

தனியாக இரைத்தேடிப் போன கோழிக்குஞ்சுகள்


மறுநாள்,  இவ்வாறு பல நாட்கள் போயின.  இப்போது அவற்றிற்கு 20 நாட்கள் இருக்கும்.  அந்த வீட்டை சுற்றி மதில் சுவர் எகிறி சுவரின் மேல் நின்றது. குஞ்சுகளை கூப்பிட்டது.  குஞ்சுகள் சுவற்றின் ஓரத்தில் அலைமோதின.  அவற்றால் சுவர் மேலே ஏறி தாவ முடியவில்லை.  ஆனால் அவை எகிரி எகிரி முயற்சி செய்தன.  இவ்வாறு தாய் பலமுறை எகிறி காண்பித்தது.  கோழி பொறுமையை சொல்லிக் கொடுத்தது.  இரண்டு மூன்று நாட்கள் இவ்வாறு சொல்லிக் கொடுத்தது.  இப்போது இரண்டு குஞ்சுகள் சுவரின் மேல் பறந்து வந்து உட்கார்ந்தன.


மற்றவை எல்லாம் முயன்றன.  இப்போது குஞ்சுகள் எல்லாம் பறந்து சுவர் மேல் அமர்ந்து சுவரின் அடுத்த பக்கம் குதித்தன.  இப்போது குஞ்சுகள் பறக்க கற்றுக் கொண்டன.  தாய்க்கு மகிழ்ச்சி குஞ்சுகளுக்கு கொண்டாட்டம்.  இவ்வாறு பல நாட்கள் சென்றன.  ஒருநாள் கோழி கூண்டை விட்டு வெகுதூரம் சென்று விட்டது.  குஞ்சுகளும் தூரம் தூரம் சென்று மேய்ந்து கொண்டிருந்தன.  இப்போது மாலை நேரம் வந்துவிட்டது.  பறவைகள் கூடு திரும்பும் நேரம்.  மேலே கழுகு பறந்தன. அவ்வளவுதான் தாய் எச்சரிக்கைக் குரல் கொடுத்தது . எல்லாக் குஞ்சுகளும் அருகில் இருந்த புதரில் புகுந்தன.  இரண்டு கோழி குஞ்சுகள் தூரத்தில் மேய்ந்தன.  அவையும் அப்படியே அசையாமல் அசையாமல் நின்றன.

சிலை போல் நின்ற என எல்லாக் குஞ்சுகளும் பொறுமையாக நீண்ட நேரம் நின்று இருந்தன.  நீண்ட நேரம் கழுகின் குரல் இல்லை.  அதில் ஒரு குஞ்சுக்கு தாயை நோக்கி ஓடிவந்தது.  ஒரே பாய்ச்சல் கழுகு.  அந்த குஞ்சு நோக்கி பாய்ந்தது.  தாய் கோழி தன் அலகையும் இரண்டு கால்களையும் முன்னே நீட்டிக் அழுகை தாக்கியது.  இதை  கழுகு எதிர்பார்க்கவில்லை.  எங்கோ திசை நோக்கி பறந்து போயிற்று.  

இப்போது குஞ்சுகள் தாயைப் பார்த்தது.  கோழி குஞ்சுகளுக்கு 50 நாள் ஆகிவிட்டது.  தாய் கோழி குஞ்சுகளுக்கு எல்லாம் கற்பித்தது.  இனி தனியே மேய வேண்டும்.  தாய் தன் குஞ்சுகளை தனியே துரத்தியது.  ஆனால் குஞ்சுகள் கீச் கீச்சென்று தாய் பின்னாலேயே சென்றன. கோழிக்குஞ்சுகளை தனிமையில் விட்டது.  இப்போது சுதந்திரமாக தானே உணவு தேடித் தின்றன.

No comments:

Post a Comment