Tamil Nadu Press Release on 26/11/2020 | தமிழக அரசின் இன்றைய (26/11/2020) செய்திகுறிப்பு - ThulirKalvi

Latest

Search Here!

Friday, November 27, 2020

Tamil Nadu Press Release on 26/11/2020 | தமிழக அரசின் இன்றைய (26/11/2020) செய்திகுறிப்பு

Tamil Nadu Press Release on 26/11/2020 | தமிழக அரசின் இன்றைய (26/11/2020) செய்திகுறிப்பு -  Download Here


தமிழக அரசு 26.11.2020 அன்று வெளியிட்டச் செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது,  

(மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் நிவர் புயலால் பாதிக்கப் பட்டுள்ளப் பகுதிகளைப் பார்வையிடல்.)


வங்கக் கடலில் உருவான நிவர் புயல் மற்றும் கனமழை காரணமாக ஏற்படும் பாதிப்புகளை தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வது குறித்து மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு எடப்பாடி கே பழனிசாமி அவர்கள் 23.11.2020 அன்று ஆலோசனை கூட்டம் நடத்தி பொதுமக்களும்,  மாவட்ட நிர்வாகங்களும் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அறிவுறுத்தினார். 

மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் அவசரக் கட்டுப் பாட்டு மையத்தைப் பார்வையிடல்.

அதனை தொடர்ந்து மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் சென்னை எழிலகத்தில் உள்ள மாநில அவசர கட்டுப்பாட்டு மையத்தை பார்வையிட்டு அவசர கட்டுப்பாட்டு மையத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் மற்றும் பணிகளை ஆய்வு செய்து செய்தியாளர்களிடம் அரசு எடுத்து வரும் நடவடிக்கைகள் குறித்து விரிவாக எடுத்துரைத்தார். மேலும் பொதுமக்கள் பாதிப்புகளில் இருந்து பாதுகாப்பாக இருக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.  

மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் செம்பரம்பாக்கம் ஏரியைப் பார்வையிடல்.

இதன் தொடர்பாக 25.11.2020 அன்று செம்பரம்பாக்கம் ஏரியில் உபரிநீர் திறந்து விட்டதையொட்டி மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் கொட்டும் மழையையும் பொருட்படுத்தாது செம்பரம்பாக்கம் ஏரிக்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டு அதன் சுற்றுப்புற பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து கேட்டறிந்து பொதுமக்கள் யாரும் பாதிப்படையாத வண்ணம் கரையோரப் பகுதிகளில் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் தேவையான உதவிகளை வழங்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் அரசு முகாம் மற்றும் மீனவ கிராமங்களைப் பார்வையிட்டு உதவிகளை வழங்கல்

இன்று 26.11.2020 மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் கடலூர் மாவட்டம், ரெட்டிசாவடி - கீழ்க்குமாரமங்கலம் கிராம பகுதிகளில் புயலால் சேதமடைந்துள்ள வாழைத் தோப்புகளை பார்வையிட்டு பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஆறுதல் கூறினார்.  தேவனாம்பட்டினம்,  அரசு முகாமில் புயல் மற்றும் மழை நீரினால் பாதிக்கப்பட்டு தங்க வைக்கப்பட்டுள்ள மக்களை சந்தித்து ஆறுதல் கூறி குறைகளை கேட்டறிந்ததுடன் அவர்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய பெட்டகத்தையும் வழங்கினார். 

மேலும் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அரசு அதிகாரிகளுடன் கேட்டறிந்ததுடன் மீட்புப் பணிகளை துரிதப்படுத்துமாறும் உத்தரவிட்டார். 

கடலூர் மாவட்ட மீனவ மக்கள் பாதுகாப்பாக இருக்கவேண்டும் என்று அரசால் ஏற்கனவே அறிவிக்கப்பட்டு அவர்களுடைய படகுகள் எல்லாம் கடலூர், முதுநகர் துறைமுகப் பகுதியில் பத்திரப்படுத்தி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதைப் பார்வையிட்டார். 

மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள்தேசிய பேரிடர் மேலாண்மையின் மீட்புப்பணிப் பற்றிக் கேட்டறிதல்

மேலும் அப்பகுதி மீனவ கிராம மக்களை சந்தித்து அவர்களிடம் நிவர் புயலால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து கேட்டறிந்து மனுக்களை பெற்றுக்கொண்டதுடன் தேவையான அனைத்து உதவிகளையும் செய்து கொடுக்க அரசு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். மேலும் தேசிய பேரிடர் மீட்புப் பணியினரிடமும் மீட்புப்பணி நடவடிக்கைகளைக் கேட்டறிந்தார்.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.